Maalai Muthal Kaalai |
---|
மாலை முதல் காலை மன்மதனின் லீலை மாலை முதல் காலை மன்மதனின் லீலை மேடை மேல் நான் ஆட மயக்கம் வரும் வேளை வேறு என்ன வேலை
மாலை முதல் காலை மன்மதனின் லீலை
வாலிபம் வந்தாலே வாசல்கள் மூடாது மல்லிகையில் பாய் போடும் மாளிகை வேறேது
விளக்கேற்றினால் நான் தரும் விருந்துகள் ஏராளம் மறைக்காமலே யாவையும் கொடுப்பதில் தாராளம் சுகங்களும் சுவைகளும் நான்தான் வழங்கவும் மயங்கவும் நாள் ஏது
மாலை முதல் காலை மன்மதனின் லீலை
ஆடைகள் மேலாக மூடிடும் மாந்தோட்டம் கல்லணைகள் தீண்டாத காவிரி நீரோட்டம்
கடைக் கண்களின் ஜாடையில் கவிக் குயில் பாடாதோ தலைக்கேறும் போதையில் தளிர்க் கொடி ஆடாதோ அறிந்தவன் புரிந்தவன் யாரோ வளைக் கரம் வளைத்திட வாராதோ
மாலை முதல் காலை மன்மதனின் லீலை மேடை மேல் நான் ஆட மயக்கம் வரும் வேளை வேறு என்ன வேலை
மாலை முதல் காலை மன்மதனின் லீலை