Maalaiyitta Kanavan |
---|
மாலையிட்ட கணவன் நாளை வருவான்
இந்த முத்து வண்ண சித்திரத்தின் முகம் பார்க்க
மாலையிட்ட கணவன் நாளை வருவான்
இந்த முத்து வண்ண சித்திரத்தின் முகம் பார்க்க
பக்கம் வந்து மெல்ல பாடல் ஒன்று சொல்ல
வெட்கம் வந்து செல்ல சொர்க்கம் கண்டு கொள்ள
பக்கம் வந்து மெல்ல பாடல் ஒன்று சொல்ல
வெட்கம் வந்து செல்ல சொர்க்கம் கண்டு கொள்ள
மாலையிட்ட கணவன் நாளை வருவான்
இந்த முத்து வண்ண சித்திரத்தின் முகம் பார்க்க
தூங்காத கண்ணே துடித்தது போதும்
துடியிடையே நீ துவண்டது போதும்
தூங்காத கண்ணே துடித்தது போதும்
துடியிடையே நீ துவண்டது போதும்
நீங்காத நினைவே அலைந்தது போதும்
நீ எதிர் பார்த்தது நடக்கும் எப்போதும்
நீங்காத நினைவே அலைந்தது போதும்
நீ எதிர் பார்த்தது நடக்கும் எப்போதும்
மாலையிட்ட கணவன் நாளை வருவான்
இந்த முத்து வண்ண சித்திரத்தின் முகம் பார்க்க
ஆனந்தக் கண்ணீர் அருவி என்றோட
ஆசை கொண்டேன் அதில் நான் விளையாட
ஆனந்தக் கண்ணீர் அருவி என்றோட
ஆசை கொண்டேன் அதில் நான் விளையாட
நால் விழி சேர்ந்தே நாடகமாட
நாயகன் வருவான் நான் உறவாட
நால் விழி சேர்ந்தே நாடகமாட
நாயகன் வருவான் நான் உறவாட
மாலையிட்ட கணவன் நாளை வருவான்
இந்த முத்து வண்ண சித்திரத்தின் முகம் பார்க்க