Maalayittu Mana Mudichu

Maalayittu Mana Mudichu Song Lyrics In English


மாலையிட்டு மணமுடிச்சி
பொட்டு வச்சிப் பூ முடிச்சி
மங்கை இவள் வாழ வந்தாள்
எங்கள் வீட்டிலே

மாலையிட்டு மணமுடிச்சி
பொட்டு வச்சிப் பூ முடிச்சி
மங்கை இவள் வாழ வந்தாள்
எங்கள் வீட்டிலே

மாலை வெயில் போல
மஞ்சள் பூசும் பெண்ணை
வாழ வைக்க மகன் வருவான்
கொஞ்ச நாளிலே

வாழ வைக்க மகன் வருவான்
கொஞ்ச நாளிலே

மாலையிட்டு மணமுடிச்சி
பொட்டு வச்சிப் பூ முடிச்சி
மங்கை இவள் வாழ வந்தாள்
எங்கள் வீட்டிலே



பள்ளியறையில் படிச்ச பாடம்
பலனளிச்சாச்சு
புருஷன் பக்கமிருந்து பேசும் பேச்சு
உருவம் கொண்டாச்சு

ஆமாமாஉருவம் கொண்டாச்சு

கண்ணே எங்கள் பொன்னே உந்தன்
கடமை ரெண்டாச்சு
கண்ணே எங்கள் பொன்னே உந்தன்
கடமை ரெண்டாச்சு
அந்தக் கலைக் காணும்
திருநாளும் அருகில் வந்தாச்சு
ஆமாமாஅருகில் வந்தாச்சு

மாலை வெயில் போலே
மஞ்சள் பூசும் பெண்ணை
வாழ வைக்க மகன் வருவான்
கொஞ்ச நாளிலே


மாலையிட்டு மணமுடிச்சி
பொட்டு வச்சிப் பூ முடிச்சி
மங்கை இவள் வாழ வந்தாள்
எங்கள் வீட்டிலே



கொண்டவளின் மனசு என்றும்
கணவனின் சொந்தம்
இன்னும் கொஞ்ச நாளில் பாதி மனசு
குழந்தையின் சொந்தம்

ஆமாமாகுழந்தையின் சொந்தம்

இங்கே பாதி அங்கே பாதி
பறந்திடும் போது
இங்கே பாதி அங்கே பாதி
பறந்திடும் போது
வாழ்வில் இரவேது பகல் ஏது
தூக்கம் ஏது

ஆமாமாதூக்கமும் ஏது

வாழ்வில் இரவேது பகல் ஏது
தூக்கம் ஏது

மாலை வெயில் போல
மஞ்சள் பூசும் பெண்ணை
வாழ வைக்க மகன் வருவான்
கொஞ்ச நாளிலே

மாலையிட்டு மணமுடிச்சி
பொட்டு வச்சிப் பூ முடிச்சி
மங்கை இவள் வாழ வந்தாள்
எங்கள் வீட்டிலே