Maalayittu Mana Mudichu |
---|
மாலையிட்டு மணமுடிச்சி
பொட்டு வச்சிப் பூ முடிச்சி
மங்கை இவள் வாழ வந்தாள்
எங்கள் வீட்டிலே
மாலையிட்டு மணமுடிச்சி
பொட்டு வச்சிப் பூ முடிச்சி
மங்கை இவள் வாழ வந்தாள்
எங்கள் வீட்டிலே
மாலை வெயில் போல
மஞ்சள் பூசும் பெண்ணை
வாழ வைக்க மகன் வருவான்
கொஞ்ச நாளிலே
வாழ வைக்க மகன் வருவான்
கொஞ்ச நாளிலே
மாலையிட்டு மணமுடிச்சி
பொட்டு வச்சிப் பூ முடிச்சி
மங்கை இவள் வாழ வந்தாள்
எங்கள் வீட்டிலே
பள்ளியறையில் படிச்ச பாடம்
பலனளிச்சாச்சு
புருஷன் பக்கமிருந்து பேசும் பேச்சு
உருவம் கொண்டாச்சு
ஆமாமாஉருவம் கொண்டாச்சு
கண்ணே எங்கள் பொன்னே உந்தன்
கடமை ரெண்டாச்சு
கண்ணே எங்கள் பொன்னே உந்தன்
கடமை ரெண்டாச்சு
அந்தக் கலைக் காணும்
திருநாளும் அருகில் வந்தாச்சு
ஆமாமாஅருகில் வந்தாச்சு
மாலை வெயில் போலே
மஞ்சள் பூசும் பெண்ணை
வாழ வைக்க மகன் வருவான்
கொஞ்ச நாளிலே
மாலையிட்டு மணமுடிச்சி
பொட்டு வச்சிப் பூ முடிச்சி
மங்கை இவள் வாழ வந்தாள்
எங்கள் வீட்டிலே
கொண்டவளின் மனசு என்றும்
கணவனின் சொந்தம்
இன்னும் கொஞ்ச நாளில் பாதி மனசு
குழந்தையின் சொந்தம்
ஆமாமாகுழந்தையின் சொந்தம்
இங்கே பாதி அங்கே பாதி
பறந்திடும் போது
இங்கே பாதி அங்கே பாதி
பறந்திடும் போது
வாழ்வில் இரவேது பகல் ஏது
தூக்கம் ஏது
ஆமாமாதூக்கமும் ஏது
வாழ்வில் இரவேது பகல் ஏது
தூக்கம் ஏது
மாலை வெயில் போல
மஞ்சள் பூசும் பெண்ணை
வாழ வைக்க மகன் வருவான்
கொஞ்ச நாளிலே
மாலையிட்டு மணமுடிச்சி
பொட்டு வச்சிப் பூ முடிச்சி
மங்கை இவள் வாழ வந்தாள்
எங்கள் வீட்டிலே