Maaney Mayanguvathu

Maaney Mayanguvathu Song Lyrics In English


மானே மயங்குவதேனோ

உனைத் தானே கலங்குவதேனோ

மணிக் குயில் இசைக்குதடி
மனம் இன்று உருகுதடி
சிறகுகள் விரிப்பதற்கே
இங்கு வழி இன்றி தவிக்குதடி
அடி மானே மறந்ததும் ஏனோ
உயிர் தானே உருகிடத் தானோ
இளம் காற்றே நீயும் கேட்டு வா
என் சோகம் நீயும் கூறி வா

மணிக் குயில் இசைக்குதடி
மனம் இன்று உருகுதடி
சிறகுகள் விரிப்பதற்கே
இங்கு வழி இன்றி தவிக்குதடி

பெண் லுலுலுலுலுலுலுலு லுலுலுலுலுலுலுலு
தீராத் துயர் அனைத்தும்
தீர்த்து வைக்கும் அம்மனுக்கு
பாடா விரதம் கொண்டு
மங்கையர்கள் பொங்க வெச்சோம்
மஞ்சள் கரச்சு வெச்ச நீரினில் தலை முழுகி
எங்கள் கரம் குவிச்சு தங்க நிறத் தாலிக்கொரு
கும்மி சொல்லி அடிப்போம்
கும்மி சொல்லி அடிப்போம்

கங்கை வெள்ளம் ஓய்ந்த பின்னே
மீன் பிடித்தல் கூடுமோ
மங்கை உள்ளம் மாறிப் போனால்
நான் துடித்து லாபமோ

காற்று திசை மாறிப் போனால்
கட்டுமரம் போகுமோ
காதல் திசை மாறிப் போனால்
அன்பு மனம் தாங்குமோ
நீரோடை மீதில் பொய்க் கோலம் போலே
நம் காதல் கோலங்கள்
இளம் காற்றே நீயும் கேட்டு வா
என் சோகம் நீயும் கூறி வா


மணிக் குயில் இசைக்குதடி
மனம் இன்று உருகுதடி
சிறகுகள் விரிப்பதற்கே
இங்கு வழி இன்றி தவிக்குதடி

பெண் ஒஹ்ஹோ ஒஹ்ஹோ
அம்மா இறங்கி வந்து
கண் திறக்க வேண்டும் அம்மா
உன்னால் வளந்த பயிர்
ஊர்கோலம் போகுதம்மா
தட்டுத் தடங்கல் இன்றி
கொட்டுகள் முழங்கி வர
பட்டாசு வானம் போல
பட்ட துயர் பட்டுப் போக
கும்மி சொல்லி அடிப்போம்
கும்மி சொல்லி அடிப்போம்

ஆற்றங்கரை ஓரம் நின்று
அன்று சொன்ன பாடல்கள்
நேற்று வந்த காற்றைப் போலே
நெஞ்சை விட்டுப் போனதோ

அந்தி வந்து சேர்ந்த பின்னே
நாள் முடிந்து போகுமா
சந்தனம்தான் காய்ந்த பின்னே
வாசம் இன்றிப் போகுமா
இளவேனில் மீண்டும்
வர வேண்டும் இங்கு
நான் வாடும் கோலம் ஏன்
இளம் காற்றே நீயும் கேட்டு வா
என் சோகம் நீயும் கூறி வா

மணிக் குயில் இசைக்குதடி
மனம் இன்று உருகுதடி
சிறகுகள் விரிப்பதற்கே
இங்கு வழி இன்றி தவிக்குதடி
அடி மானே மறந்ததும் ஏனோ
உயிர் தானே உருகிடத் தானோ
இளம் காற்றே நீயும் கேட்டு வா
என் சோகம் நீயும் கூறி வா

மணிக் குயில் இசைக்குதடி
மனம் இன்று உருகுதடி
சிறகுகள் விரிப்பதற்கே
இங்கு வழி இன்றி தவிக்குதடி