Maanooththu Manthaiyile

Maanooththu Manthaiyile Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ஏ ஆர் ரஹமான்


மானூத்து மந்தையில
மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு
பொலிகாட்டில் கூவும் குயிலே

தாய்மாமன் சீர்
சொமந்து வாராண்டி
அவன் தங்கக் கொலுசு
கொண்டு தாராண்டி

சீரு சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே

நாட்டுக் கோழி அடிச்சு
நாக்கு சொட்ட சமைச்சு
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா

மேலு காலு வலிச்சா
வெள்ளப்பூண்டு உரிச்சி
வெல்லங் கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா

பச்ச ஒடம்புக்காரி
பாத்து நடக்கச்சொல்லுங்க
பிள்ளைக்கி தாய்ப்பாலத்
தூக்கிக் கொடுக்கச்சொல்லு

மச்சான திண்ணையில
போத்திப் படுக்கச்சொல்லு

மானூத்து மந்தையில
மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு
பொலிகாட்டில் கூவும் குயிலே

தாய்மாமன் சீர்
சொமந்து வாராண்டி
அவன் தங்கக் கொலுசு
கொண்டு தாராண்டி


சீரு சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே

ஆட்டுப்பால் குடிச்சா
அறிவழிஞ்சி போகுமுன்னு
எருமப்பால் குடிச்சா
ஏப்பம் வந்து சேருமுன்னு
காராம்பசு ஓட்டி
வாராண்டி தாய் மாமன்

வெள்ளிச்சங்கு செஞ்சா
வெலக்கி வெக்க வேணுமுன்னு
தங்கத்தில் சங்கு செஞ்சி
தாராண்டி தாய் மாமன்

பச்ச ஒடம்புக்காரி
பாத்து நடக்கச்சொல்லுங்க
ஈ எறும்பு அண்டாம
எட்டி இருக்கச்சொல்லு
மச்சான ஈரத்துணி
கட்டி இருக்கச்சொல்லுஹாஹா

மானூத்து மந்தையில
மாங்குட்டி பெத்த மயிலேஐயோ
பொட்டபுள்ள பொறந்ததுன்னு
பொலிகாட்டில் கூவும் குயிலே

தாய்மாமன் சீர்
சொமந்து வாராண்டி
அவன் தங்கக் கொலுசு
கொண்டு தாராண்டி

சீரு சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே
ஹோய்
சீரு சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே

மானூத்து மந்தையில
மாங்குட்டி பெத்த மயிலேபோடு
பொட்டபுள்ள பொறந்ததுன்னு
பொலிகாட்டில் கூவும் குயிலே