Maatra Paravai |
---|
ரெக்கை கொண்ட மாற்றமோ
வான் விட்டு மண்ணில் வந்ததே
சுவாச குழல் சேர்ந்திட
பூக்களை ஏந்தி வந்ததே
குமிழ் குமிழ் என குழப்பங்களே
அழகினை கொண்டு உடைக்கிறதே
நெஞ்சில் பூட்டி வைத்த வார்த்தைகளை
குத்தி வெளியிலே எடுக்குதே
மாற்ற பறவையோ தோளில் அமர்ந்ததே
காதில் ரகசியம்
ஒன்று சொல்லி விட்டு பறந்ததே
முடிவுகள் தேடி
முட்டிக்கொள்ள வேண்டாம்
முயல்வது ஒன்றே
இன்றும் இன்பம் என்றே
இருவர் : ரெக்கை கொண்ட மாற்றம்
என் காதினில் சொல்லி சென்றதே
பயம் விட்டு என்னை வாழ சொன்னதே
மனம் விட்டு என்னை பேச சொன்னதே
மொழி உதவிட மறுக்கையிலே
செய்கையால் சொல் என்றதே
மாற்ற பறவையோ காற்றில் மிதக்குதே
எந்தன் மனதையும்
இன்று கவ்வி கொண்டு பறக்குதே