Maavaalae Seithapillai

Maavaalae Seithapillai Song Lyrics In English


பெண்கள் : மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை
இளம் மங்கை உன்னை மணக்கப் போகும் ஆண்பிள்ளை
மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை
இளம் மங்கை உன்னை மணக்கப் போகும் ஆண்பிள்ளை

அழகனோ அறிஞனோ
அழகனோ அறிஞனோ
அறியவில்லை நானடி
ஆவதெல்லாம் ஆனபின்னே
அங்கே வந்து கேளடி

பெண்கள் : மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை

மான்யம் போன ராஜாவுக்கு மகனடி
அந்த மதுரை வீர சாமி போல முகமடி
மான்யம் போன ராஜாவுக்கு மகனடி
அந்த மதுரை வீர சாமி போல முகமடி
பெண்கள் : திருச்செந்தூர் தீபம் போல கண்ணடி
திருச்செந்தூர் தீபம் போல கண்ணடி
உன் திருமணத்தில் அவனைப் பார்த்துக் கண்ணடி

அனுபவம் என்ன அனுபவம்
உந்தன் அனுபவந்தான் எனக்கும் இன்று அறிமுகம்

பெண்கள் : மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை

பள்ளியிலே சுகம் தருவான் நெஞ்சுக்கு
நல்ல பருவத்திலே சாந்தி வரும் பெண்ணுக்கு
பள்ளியிலே சுகம் தருவான் நெஞ்சுக்கு
நல்ல பருவத்திலே சாந்தி வரும் பெண்ணுக்கு


பெண்கள் : இரவு வரும் இன்பம் வரும் எப்போதும்
ஆனால் இரண்டு பிள்ளை பிறந்த பின்னே முக்கோணம்

ஓஹோசரியம்மா நல்ல கதையம்மா
நல்ல சமயத்திலே தூவி விட்ட விதையம்மா

காதல் மலர் மலருமுன்னே ஒரு மனம்
பின் கன்னியாக வளரும்போது இரு மனம்
காதல் மலர் மலருமுன்னே ஒரு மனம்
பின் கன்னியாக வளரும்போது இரு மனம்

பெண்கள் : காலத்தோடு முடிய வேண்டும் திருமணம்
காலத்தோடு முடிய வேண்டும் திருமணம்
இன்பம் காண வேண்டும் ஒருத்தியோடு ஒருவனும்

ம்ம்ஹீம்ஓஹோஓஹோகொஞ்சம் தெரிந்தது
ம்ம்ஹீம்ஓஹோஓஹோகொஞ்சம் தெரிந்தது
உன் போதனையால் மனதும் கொஞ்சம் மலர்ந்தது

பெண்கள் : மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை
இளம் மங்கை உன்னை மணக்கப் போகும் ஆண்பிள்ளை