Madharin Kungumam |
---|
மாதரின் குங்குமம் காத்திடும் தேவி நான் நாகேஸ்வரி நாதனாம் ஈசனின் மேனியில் ஆடிடும் நானே ஈஸ்வரி
மாதரின் குங்குமம் காத்திடும் தேவி நான் நாகேஸ்வரி நாதனாம் ஈசனின் மேனியில் ஆடிடும் நானே ஈஸ்வரி
கோபம் கொண்ட நாகம் இன்று காலம் கண்டு காத்திருந்து சீறி வந்து வஞ்சம் தீர்க்குமே
தீய நஞ்சு கொண்ட போதும் தூய்மையாக வாழ்பவர்க்கு வந்து சேரும் மாணிக்கமே
ஆசைகளை சட்டையென்றே என் போலவே நீ நீக்கிடலாம் பரமேஸ்வரி திரிசூலமே என் மேனியில் நீ பார்த்திடலாம்
மாதரின் குங்குமம் காத்திடும் தேவி நான் நாகேஸ்வரி நாதனாம் ஈசனின் மேனியில் ஆடிடும் நானே ஈஸ்வரி
மனித வடிவில் நாகம் பலவும் வெளியில் உலவுதே கொடிய நாகம் என்று எம்மை உலகம் இகழுதே
மனித வடிவில் நாகம் பலவும் வெளியில் உலவுதே கொடிய நாகம் என்று எம்மை உலகம் இகழுதே
மாதரின் குங்குமம் காத்திடும் தேவி நான் நாகேஸ்வரி நாதனாம் ஈசனின் மேனியில் ஆடிடும் நானே ஈஸ்வரி
புற்றுக்குள் மறைந்ததால் சமைந்தவள் எனச் சொல்லும் சமயப்புர மாரியும் நானே கும்பத்தில் நாகமாய் குறுமுனிவன் ஏந்திடும் கருமாரி அன்னையும் நானே
பரமனின் ஆபரணம் பரந்தாமனின் மஞ்சம் பார்வதியின் கங்கணமும் நானே உருமாறியே தேவி அவதாரமாய் வந்த நாகேஸ்வரி என்றும் நானே நாகேஸ்வரி என்றும் நானே நாகேஸ்வரி என்றும் நானே