Madhurai Meenatchi Devi |
---|
இசை அமைப்பாளர் : தர்மா தேஜா
மதுரை மீனாட்சி தேவி
அருளாட்சி செய்யும் மதுரை
தமிழை உலகாளச் செய்த
உயிர் மூச்சு எங்கள் மதுரை
சித்திரைத் திங்களில் வைகை நதி
கள்ளழகரைக் கண்டதும் போடும் ஜதி
சொல்லிலும் செயலிலும் துரிதகதி
சொல் காத்திடும் மதுரையில் தெய்வ நிதி
இரவு முழுதும் விழித்து உலவும் மதுர பதி
மதுரை மீனாட்சி தேவி
அருளாட்சி செய்யும் மதுரை
கிராம கலைக் காவியம்
ஆடல் கலை ஓவியம்
சிற்பக் கலை எழில் மேவும்
தமிழ் வாழும் அருளாலயம்
கொஞ்சும் விழிப் பார்வையும்
சிந்தும் இசைக் கோர்வையும்
சொந்தமெனும் மனம் தேடும்
தினம் கூடும் உறவாயிரம்
நான் மாடக் கூடல் நகரம்
வான் மீது மோத உயரும்
புது சங்கம் கோடி வளரும்
தமிழ்ச் சங்க கீதம் மலரும்
மதுரை நகரம் மொழியின் அகரம் தமிழ் சிகரம்
நெற்றிக் கண்ணைக் கண்டது
குற்றமெனச் சொன்னது
ஈசன் அவன் இசைப் பாடல்
பிழை என்று தமிழ் வென்றது
வீரம் உள்ள மண்ணிது வெற்றியுடன் வாழுது
வானமது வளைந்தெங்கள் பூமிக்கு வழி காட்டுது
தேரோடும் வீதி மயங்கும்
தெய்வீக நாதம் முழங்கும்
பாமாலை பாடும் அரங்கம்
பூமாலை சூடி வணங்கும்
மதுரை நகரம் மொழியின் அகரம் தமிழ் சிகரம்
மதுரை மீனாட்சி தேவி
அருளாட்சி செய்யும் மதுரை
தமிழை உலகாளச் செய்த
உயிர் மூச்சு எங்கள் மதுரை
சித்திரைத் திங்களில் வைகை நதி
கள்ளழகரைக் கண்டதும் போடும் ஜதி
சொல்லிலும் செயலிலும் துரிதகதி
சொல் காத்திடும் மதுரையில் தெய்வ நிதி
இரவு முழுதும் விழித்து உலவும் மதுர பதி