Magathaana Uravugalai |
---|
மகத்தான உறவுகளை
மனதார நம்பியது குற்றம் இல்லை
என் மனதில் பாவம் சுமக்கவில்லை
மகத்தான உறவுகளை
மனதார நம்பியது குற்றம் இல்லை
என் மனதில் பாவம் சுமக்கவில்லை
இதுதான் உறவு என்றால்
இதுதான் உலகம் என்றால்
போடா எதுவும் தேவை இல்லை
மகத்தான உறவுகளை
மனதார நம்பியது குற்றம் இல்லை
என் மனதில் பாவம் சுமக்கவில்லை
என் மனதில் பாவம் சுமக்கவில்லை
வீடு வரை உறவென்று சொன்னவனே
பாசம் வைத்தால் மோசம் என்று சொல்லி விட்டான்
யாரை நம்பி நான் பொறந்தேன் என்றவனே
உன்னை நம்பி வாழ்கவென்று சொல்லி வைத்தான்
நல்லதையே செய்கிறேன் நல் வழி போகிறேன்
என் நெஞ்சம் என்றுமே ஒன்றுதான்
வழி மாறிப் போனவன் தன்னையே மறந்தவன்
அவன் வாழ்க்கை என்றுமே இரண்டுதான்
உண்மை என்ன போலி என்ன புரியாத மனிதரே
நல்லவர் காணவில்லை இந்த உலகில் நன்றி இல்லை
மகத்தான உறவுகளை
மனதார நம்பியது குற்றம் இல்லை
என் மனதில் பாவம் சுமக்கவில்லை
வாழையடி வாழை என வாழ்கவென்று
வாழை வைத்தேன் வாள் எடுத்து வீழ்த்தி விட்டான்
சபலம் என்னும் சஞ்சலத்தில் சாய்ந்து விட்டான்
சத்தியத்தின் வாசலை சாத்தி விட்டான்
வாழ்வெல்லாம் அனித்தியம் உண்மை நிரந்தரம்
அறிந்தவனோ என்றுமே ஞானிதான்
சுயநலன்கள் பெரிதென சுகங்களை மதிப்பவன்
மண்ணுலகில் என்றுமே பாவி தான்
உண்மை என்ன போலி என்ன புரியாத மனிதரே
நல்லவர் காணவில்லை இந்த உலகில் நன்றி இல்லை
மகத்தான உறவுகளை
மனதார நம்பியது குற்றம் இல்லை
என் மனதில் பாவம் சுமக்கவில்லை
இதுதான் உறவு என்றால்
இதுதான் உலகம் என்றால்
போடா எதுவும் தேவை இல்லை
எதுவும் தேவை இல்லை எதுவும் தேவை இல்லை