Makkal Oru

Makkal Oru Song Lyrics In English


மக்களொரு தவறு செய்தால்
மாமன்னன் தீர்ப்பளிப்பான்
மன்னவனே தவறு செய்தால்
மாநிலத்தில் யார் பொறுப்பார்

நினைத்து வந்த செயலொன்று
நடந்து போன கதையொன்று
நீதி தேவன் காலடியில்
வீழ்ந்து விட்டேன் நானின்று

நினைத்து வந்த செயலொன்று
நடந்து போன கதையொன்று
நீதி தேவன் காலடியில்
வீழ்ந்து விட்டேன் நானின்று

நினைத்து வந்த செயலொன்று
நடந்து போன கதையொன்று

இருட்டினில் தவித்த இருவரைக் காக்க
ஏற்றிட முயன்றேன் ஒரு விளக்கை
இருட்டினில் தவித்த இருவரைக் காக்க
ஏற்றிட முயன்றேன் ஒரு விளக்கை
அந்த இருட்டினில் நானே மூழ்கிவிட்டேன்
இருட்டினில் நானே மூழ்கிவிட்டேன்
இங்கு யாரிடம் சொல்வேன் என் வழக்கை
யாரிடம் சொல்வேன் என் வழக்கை


நினைத்து வந்த செயலொன்று
நடந்து போன கதையொன்று
நீதி தேவன் காலடியில்
வீழ்ந்து விட்டேன் நானின்று

நினைத்து வந்த செயலொன்று
நடந்து போன கதையொன்று

முறை கெட்ட மன்னனுக்கு
முடி எதற்கு
நெறி கெட்ட நெஞ்சிற்கு நினைவெதற்கு
கரைபட்டுப் போன இந்தக் கரம் எதற்கு
இந்தக் கரம் எதற்கு