Malar Koduthaen |
---|
மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மாஓ
என்னையும் தாலாட்டம்மா
மகனோ மகளோ பிறக்கும்
என் வீடு நலமாக
மடியில் தவழும் உருவம்
என் தந்தை முகமாக
இது ஒரு சீராட்டம்மாஓ
என்னையும் தாலாட்டம்மா
மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மாஓ
என்னையும் தாலாட்டம்மா
அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ
அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ
அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ
அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ
மாதங்கள் பதமாக உருவானதோ
மகராணி முகம் இங்கு மெருகேருதோ
ஆடாத பொன்னூஞ்சல் ஆடு
பாடாத தென்பாங்கு பாடு
மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மாஓ
என்னையும் தாலாட்டம்மா
என் பாட்டில் ஒரு ராகம் உருவானது
என் வீட்டின் எண்ணிக்கை மூன்றானது
தன் கைகள் கொட்டட்டும் என் செல்வமே
தாயாக ஆகட்டும் என் தெய்வமே
ஆடாத பொன்னூஞ்சல் ஆடு
பாடாத தென்பாங்கு பாடு
கண்ணான மணவாளன் சேயாகிறான்
கண்ணான மகராசி தாயாகிறாள்
கண்ணான மணவாளன் சேயாகிறான்
கண்ணான மகராசி தாயாகிறாள்
கட்டில் கொண்டாள் அங்கு நான் பிள்ளையே
தொட்டில் கொண்டாள் அங்கு என் பிள்ளையே
ஆடாத பொன்னூஞ்சல் ஆடு
பாடாத தென்பாங்கு பாடு
மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மாஓ
என்னையும் தாலாட்டம்மா