Malar Manjangal

Malar Manjangal Song Lyrics In English


மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
இதழா இது இடையா இது
ராவோடு பாய் போடு
விடியும் வரையில் நிலவில் நனையும்

மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
இதழா இது இடையா இது
ராவோடு பாய் போடு
விடியும் வரையில் நிலவில் நனையும்

மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்

மேலாடை மூடும் பாலாடை தேகம்
தரை மீது நிலவாக உலவும்
நீராடும் கோலம் நீ காணும் நேரம்
நூலாடை தானாக நழுவும்
ஒளி வீசும் கூந்தல் உடையாகாதோ
காற்றில் அதுவும் கலைந்திடாதோ

மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
இதழா இது இடையா இது
ராவோடு பாய் போடு
விடியும் வரையில் நிலவில் நனையும்


மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்

நீ சூடும் பூக்கள் என் பேரைச் சொல்லும்
உறங்காமல் உன் நெஞ்சில் உருகும்
கண்ணாடி முன்னால்
நான் சென்று நின்றால்
உன் பிம்பம் தான் அங்கு தெரியும்
மலர் சோலைக்குள்ளே
மழை வாராதோ
மழையை மழையே நனைத்திடுமோ

மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
இதழா இது
ம்ம்ம்
இடையா இது
ம்ம்
ராவோடு பாய் போடு
விடியும் வரையில் நிலவில் நனையும்

மலர் மஞ்சங்கள்
மகரந்தங்கள்
இள முத்தங்கள்
இடும் சத்தங்கள்