Malare Thendral Paadum Solo

Malare Thendral Paadum Solo Song Lyrics In English


மலரே தென்றல் பாடும்
கானம் இது
நிலவே உன்னைக் கூடும்
வானம் இது

நிலம் இடம் மாறினாலும்
நிழல் நிறம் மாறினாலும்
நிலை பெறும் காதல் என்னும்
நிஜம் நிறம் மாறிடாது
இறைவனின் தீர்ப்பு இது ஓ
எவர் இதை மாற்றுவது

மலரே தென்றல் பாடும்
கானம் இது

பூபாளம் கேட்கும்
அதிகாலையும்ம்ம்
பூஞ்சோலை பூக்கும்
இள மாலையும்ம்ம்
நீ அன்றி ஏது ஒரு ஞாபகம்ம்ம்
நீ பேசும் பேச்சு மணி வாசகம்

உள்ளம் எனும் வீடெங்கும்
உன் அழகை நான்தானே
சித்திரத்தைப் போல் என்றும்
ஒட்டி வைத்துப் பார்த்தேனே
எனைத் தழுவும்இளம் தளிரே
உனக்கென நான் வாழ்கிறேன்

மலரே தென்றல் பாடும்
கானம் இது
நிலவே உன்னைக் கூடும்
வானம் இது


காட்டாறு போலே
சில வேளையில்
காவேரி ஓடும் பல பாதையில்
ஆனாலும் ஓர் நாள்
கடல் சேர்ந்திடும்
நாள் ஆன போதும்
அது நேர்ந்திடும்

திக்குத் திசை தோன்றாமல்
வண்ணக் கிளி போனாலும்
தான் இருந்த கூட்டைத்தான்
தேடி வரும் எந்நாளும்
இரு மனமும்ஒரு மனதாய்
இணைந்திடும் நாள் வாய்த்ததே

மலரே தென்றல் பாடும்
கானம் இது
நிலவே உன்னைக் கூடும்
வானம் இது

நிலம் இடம் மாறினாலும்
நிழல் நிறம் மாறினாலும்
நிலை பெறும் காதல் என்னும்
நிஜம் நிறம் மாறிடாது
இறைவனின் தீர்ப்பு இது ஓ
எவர் இதை மாற்றுவது

மலரே தென்றல் பாடும்
கானம் இது
நிலவே உன்னைக் கூடும்
வானம் இது