Malargal Nanaindhana |
---|
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்
இரு கன்னம் குழி விழ நகை செய்தான்
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்
இரு கன்னம் குழி விழ நகை செய்தான்
என்னை நிலாவினில் துயர் செய்தான்
என்னை நிலாவினில் துயர் செய்தான்
அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்
சேர்ந்து மகிழ்ந்து போராடி
தலை சீவி முடித்தேன் நீராடி
சேர்ந்து மகிழ்ந்து போராடி
தலை சீவி முடித்தேன் நீராடி
கன்னத்தை பார்த்தேன் முன்னாடி
கன்னத்தை பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
இறைவன் முருகன் திரு வீட்டில்
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
இறைவன் முருகன் திரு வீட்டில்
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
உயிரெனும் காதல் நெய்யூற்றி
உயிரெனும் காதல் நெய்யூற்றி
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே