Malargal Nanaindhana

Malargal Nanaindhana Song Lyrics In English


மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே

மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்
இரு கன்னம் குழி விழ நகை செய்தான்
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்
இரு கன்னம் குழி விழ நகை செய்தான்
என்னை நிலாவினில் துயர் செய்தான்
என்னை நிலாவினில் துயர் செய்தான்
அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்

சேர்ந்து மகிழ்ந்து போராடி
தலை சீவி முடித்தேன் நீராடி
சேர்ந்து மகிழ்ந்து போராடி
தலை சீவி முடித்தேன் நீராடி
கன்னத்தை பார்த்தேன் முன்னாடி
கன்னத்தை பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி

மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே


இறைவன் முருகன் திரு வீட்டில்
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
இறைவன் முருகன் திரு வீட்டில்
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
உயிரெனும் காதல் நெய்யூற்றி
உயிரெனும் காதல் நெய்யூற்றி
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி

மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே

மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே