Malargalil Aadum

Malargalil Aadum Song Lyrics In English


மலர்களில் ஆடும்
இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும்
நினைவு இனிமையே ஹோய்

மலர்களில் ஆடும்
இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும்
நினைவு இனிமையே ஹோய்
பருவமே சுகமே
பூங்காற்றே நீ பாடு

மலர்களில் ஆடும்
இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும்
நினைவு இனிமையே ஹோய்

பூ மரத்தின் வாசம் வந்தால்
ஏதேதோ ஆசை
நெஞ்சுக்குள் தாளாடும்

பால் வடியும் பசுங்கிளிகள்
பேசாமல் பேசும்
பொன்வண்டோ தேரோடும்

சொர்கத்தின் பக்கத்தை
இங்கு நான் காண
என்றென்றும் உன்னோடும்
நாளும் நான் ஆட
வந்தேனே தோழி நீயம்மா

மலர்களில் ஆடும்
இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும்
நினைவு இனிமையே ஹோய்


நான் இன்று கேட்பதெல்லாம்
கல்யாண ராகம்
எண்ணங்கள் போராடும்

நான் இன்று காண்பதெல்லாம்
பொன்னான நேரம்
எங்கெங்கும் தேனோடும்

இன்பத்தின் வண்ணங்கள்
என்னை சீராட்ட
பொன்வண்டின் ரீங்காரம்
கொஞ்சம் தாலாட்ட
பெண் மானே நாணம் ஏன் அம்மா

மலர்களில் ஆடும்
இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும்
நினைவு இனிமையே ஹோய்
பருவமே சுகமே
பூங்காற்றே நீ பாடு

மலர்களில் ஆடும்
இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும்
நினைவு இனிமையே ஹோய்
ஹாஆஅஆஅஹாஆ
ஹாஆஅஆஅஹாஆ