Malaroadu Piranthavala

Malaroadu Piranthavala Song Lyrics In English


மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா உயிரோடு கலந்தவளா இவள்தானா இவள்தானா இவள்தானா

மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா எனை ஆளும் மன்னவரா இவர்தானா இவர்தானா இவர்தானா

வெண்பனியே மேகத்துடன் ஊர்வலமா கண்களிலே காதலர்கள் போர்க்களமாஆ

மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா எனை ஆளும் மன்னவரா இவர்தானா இவர்தானா இவர்தானா

உன் தீண்டலில் உயிர் வரை வேர்க்கிறேன் என் இரவினை நீளமாய் கேட்கிறேன் உன் நாணத்தை ஜாசகம் கேட்கிறேன் பொன் அந்தியாய் வானத்தில் சேர்க்கிறேன்

இரவுகள் தோறும் விழி நிலவில் கனவுகள் பூக்கும் தலைவனை தேடும் இது ஒரு தலையணையாகும் மேகமே மேகமே ஒரு வானவில் தூரிகை பார்த்ததும் வியக்கிறேன் பால் நிலா ஓவியம்

மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா எனை ஆளும் மன்னவரா இவர்தானா இவர்தானா இவர்தானா


உன் மடியினில் ஒரு கணம் சாய்கிறேன் நான் மறுபடி மழலையாய் ஆகிறேன் வெண்சாமரம் இமைகளால் வீசுவேன் என் கண்களால் காதலை பேசுவேன்

சந்தன சிலையா செய்தது மன்மத கலையா சேலையில் அலையா வீசி வரும் தென்றலின் நிலையா காதலே காதலே புது கவிதையா தாய்மடி வாய் மொழி கேட்கையில் பூங்காவியம் பிறக்குதே

மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா உயிரோடு கலந்தவளா இவள்தானா இவள்தானா இவள்தானா

தாவணியே புல்வெளி பாய் மரமா காதலிலே தூதாக போய் வருவாஆ

மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா உயிரோடு கலந்தவளா இவள்தானா இவள்தானா இவள்தானா