Malaruthu Malaruthu |
---|
மலருது மலருது
ஒரு மனம் மலருது
உருகுது உருகுது
ஒரு கணம் வளருது
பறக்கிறதே
உயிர் வானத்தில் வானத்தில்
சிவக்கிறதே
முகம் நாணத்தில் நாணத்தில்
இவள் உயிர் இருக்கும்
இடம் கண்டு பிடித்தேன்
இதயம் இணைப்பேன்
இமையாய் இருப்பேன் வா
மருகிய பூச்செடி
மறுபடி பூத்தது
கிறுக்கிய வார்த்தையும்
கவிதை என்றானது
நிலவுக்கு வாழ்விலே
ஒளி வந்து சேர்ந்தது வா வா
அதிசயம் அதிசயம்
இது ஒரு அதிசயம்
இருட்டிய மேற்கிலே
சூரிய தரிசனம்
ஹோ ஹோ ஹோ ஓஒ
ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ
நட்பு என்னும் வானம்தான்
வாழ்க்கை தருதே
பாலைவனம் மேல் இன்று
மேகம் வருதே
பாதி பூத்த தாமரை பூ
மீதி பூத்தது
காதல் என்னும் கானல் மாறி
கங்கை வார்த்தது
ஒரு வார்த்தை இல்லை
இனி நன்றி சொல்ல
நீ நண்பன் இல்லை
என் அன்னை போல
உன் மனம் சுகம் பெரும்
தினம் சந்தோசமே
அதிசயம் அதிசயம்
இது ஒரு அதிசயம்
இருட்டிய மேற்கிலே
சூரிய தரிசனம்
ஹோ ஹோ ஹோ ஓஒ
கண் சிமிட்டும் பூங்காற்றே
எங்கே இருந்தாய்
கண் இமைக்குள் நீ தானா
காத்து கிடந்தாய்
மீண்டும் எந்தன் தேகம் எங்கும்
காதல் பூ மழை
மௌனம் ஒன்று வார்த்தையாகி
பாடும் காதலை
நான் வாழ்ந்து விட்டேன்
இந்த ஒரு நொடிக்குள்
தொடு வானமேதான்
என் கை பிடிக்குள்
இருவர் : நம் இனி முழு நிலா
விழா கொண்டாடுவோம்
மலருது மலருது
ஒரு மனம் மலருது
உருகுது உருகுது
ஒரு கணம் வளருது
பறக்கிறதே
உயிர் வானத்தில் வானத்தில்
சிவக்கிறதே
முகம் நாணத்தில் நாணத்தில்
இவள் உயிர் இருக்கும்
இடம் கண்டு பிடித்தேன்
இதயம் இணைப்பேன்
இமையாய் இருப்பேன் வா
மருகிய பூச்செடி
மறுபடி பூத்தது
கிறுக்கிய வார்த்தையும்
கவிதை என்றானது
நிலவுக்கு வாழ்வில்லை
ஒளி வந்து சேர்ந்தது வா வா
அதிசயம் அதிசயம்
இது ஒரு அதிசயம்
இருட்டிய மேற்கிலே
சூரிய தரிசனம்