Malaruthu Malaruthu

Malaruthu Malaruthu Song Lyrics In English


மலருது மலருது
ஒரு மனம் மலருது
உருகுது உருகுது
ஒரு கணம் வளருது

பறக்கிறதே
உயிர் வானத்தில் வானத்தில்
சிவக்கிறதே
முகம் நாணத்தில் நாணத்தில்

இவள் உயிர் இருக்கும்
இடம் கண்டு பிடித்தேன்
இதயம் இணைப்பேன்
இமையாய் இருப்பேன் வா

மருகிய பூச்செடி
மறுபடி பூத்தது
கிறுக்கிய வார்த்தையும்
கவிதை என்றானது
நிலவுக்கு வாழ்விலே
ஒளி வந்து சேர்ந்தது வா வா

அதிசயம் அதிசயம்
இது ஒரு அதிசயம்
இருட்டிய மேற்கிலே
சூரிய தரிசனம்

ஹோ ஹோ ஹோ ஓஒ
ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ

நட்பு என்னும் வானம்தான்
வாழ்க்கை தருதே
பாலைவனம் மேல் இன்று
மேகம் வருதே

பாதி பூத்த தாமரை பூ
மீதி பூத்தது
காதல் என்னும் கானல் மாறி
கங்கை வார்த்தது

ஒரு வார்த்தை இல்லை
இனி நன்றி சொல்ல
நீ நண்பன் இல்லை
என் அன்னை போல

உன் மனம் சுகம் பெரும்
தினம் சந்தோசமே

அதிசயம் அதிசயம்
இது ஒரு அதிசயம்
இருட்டிய மேற்கிலே
சூரிய தரிசனம்

ஹோ ஹோ ஹோ ஓஒ




கண் சிமிட்டும் பூங்காற்றே
எங்கே இருந்தாய்
கண் இமைக்குள் நீ தானா
காத்து கிடந்தாய்

மீண்டும் எந்தன் தேகம் எங்கும்
காதல் பூ மழை
மௌனம் ஒன்று வார்த்தையாகி
பாடும் காதலை

நான் வாழ்ந்து விட்டேன்
இந்த ஒரு நொடிக்குள்
தொடு வானமேதான்
என் கை பிடிக்குள்

இருவர் : நம் இனி முழு நிலா
விழா கொண்டாடுவோம்

மலருது மலருது
ஒரு மனம் மலருது
உருகுது உருகுது
ஒரு கணம் வளருது

பறக்கிறதே
உயிர் வானத்தில் வானத்தில்
சிவக்கிறதே
முகம் நாணத்தில் நாணத்தில்

இவள் உயிர் இருக்கும்
இடம் கண்டு பிடித்தேன்
இதயம் இணைப்பேன்
இமையாய் இருப்பேன் வா

மருகிய பூச்செடி
மறுபடி பூத்தது
கிறுக்கிய வார்த்தையும்
கவிதை என்றானது
நிலவுக்கு வாழ்வில்லை
ஒளி வந்து சேர்ந்தது வா வா

அதிசயம் அதிசயம்
இது ஒரு அதிசயம்
இருட்டிய மேற்கிலே
சூரிய தரிசனம்