Malligai Malareduthu |
---|
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
மல்லிகை மலரெடுத்து மாறன் கணை தொடுக்க
மன்னவன் நினைவெடுத்து மங்கை மனம் துடிக்க
கிடைத்ததோ அவன் தரிசனம்
இனித்ததோ ஓர் இளமனம்
மல்லிகை மலரெடுத்து மாறன் கணை தொடுக்க
மன்னவன் நினைவெடுத்து மங்கை மனம் துடிக்க
கிடைத்ததோ அவன் தரிசனம்
இனித்ததோ ஓர் இளமனம்
தேவன் வடிவோ என் தெய்வம் இதுவோ
தையல் மனதில் ஓர் மையல் தருமோ
அவன் மணிக்கரம் எனைத் தழுவுமோ
இவள் மனக்குறை இனி தணியுமோ
மல்லிகை மலரெடுத்து மாறன் கணை தொடுக்க
மன்னவன் நினைவெடுத்து மங்கை மனம் துடிக்க
கிடைத்ததோ அவன் தரிசனம்
இனித்ததோ ஓர் இளமனம்
வனத்திலும் மனத்திலும் வசிப்பவன்
வசப்படும் வேளை நான் கண்டேன்
சேரும் தோளை நான் கண்டேன்
வளைக்கரம் குலுங்கிட மதுக்குடம் ததும்பிட
பாவை நான் வந்தேன் ஏதோ தேவை நான் வந்தேன்
என் நெஞ்சில் தாபம் மிஞ்ச
என் கண்கள் ரெண்டும் கெஞ்ச
ஒரு மயக்கம் பிறக்க நடுக்கம் எடுக்க
மோகம் உருவாக இளம் தேகம் தணலாக
மோகம் உருவாக இளம் தேகம் தணலாக
அவன் விழிப்புனல் எனை நனைக்குமோ
உடல் பனிக்கடல் எனக் குளிருமோ
மல்லிகை மலரெடுத்து மாறன் கணை தொடுக்க
மன்னவன் நினைவெடுத்து மங்கை மனம் துடிக்க
கிடைத்ததோ அவன் தரிசனம்
இனித்ததோ ஓர் இளமனம்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
சரங்களை தொடுப்பவன் சடைமுடி தரித்தவன்
காட்டில் வந்தானோ சாமக்கானம் கேட்டானோ
எனக்கொரு வரம் தர விரும்பிய சுகம் தர
நேரில் வந்தானோ வேண்டும் நேசம் தந்தானோ
என் அச்சம் நாணம் கொல்ல
நான் இன்னும் என்ன சொல்ல
இனி நெருங்க நெருங்க அனைத்தும் வழங்க
நேரம் இனிதாக அந்தி மாலைப்பொழுதாக
நேரம் இனிதாக அந்தி மாலைப்பொழுதாக
அவன் மடித்தலம் நிழல் கொடுக்குமோ
இவள் நலம் பெற அருள் கிடைக்குமோ
மல்லிகை மலரெடுத்து மாறன் கணை தொடுக்க
மன்னவன் நினைவெடுத்து மங்கை மனம் துடிக்க
கிடைத்ததோ அவன் தரிசனம்
இனித்ததோ ஓர் இளமனம்