Malligaiye Malligaiye

Malligaiye Malligaiye Song Lyrics In English


ஆஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஆஆஅ

மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்
தேயாமலே பிறை போல் ஆகிறேன்
தாங்காது இனி தாங்காது

மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ

சந்திரனும் சுட்டது இங்கே
சந்தனமும் போனது எங்கே
சந்திரனும் சுட்டது இங்கே
சந்தனமும் போனது எங்கே
ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே
நித்திரையும் கெட்டது பெண்ணே
ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே
நித்திரையும் கெட்டது பெண்ணே

மணிக் குயில் பாடும்
குரல் கேட்டு வருவாயா
தனிமையில் வந்து
ஒன்று கேட்டால் தருவாயா

மீண்டும் மீண்டும் நீ
அதைக் கேட்டுப் பாரம்மா

மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்
தேயாமலே பிறை போல் ஆகிறேன்
தாங்காது இனி தாங்காது

மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ


தனதந்த தனதந்த
தனதந்த தனதந்த தனானா
தனதந்த தனதந்த
தனதந்த தனதந்த தனானா

என் மனசு என்னிடம் இல்லை
ராத்திரியில் எத்தனை தொல்லை
என் மனசு என்னிடம் இல்லை
ராத்திரியில் எத்தனை தொல்லை
செண்பகமும் மல்லிகை மொட்டும்
வந்து வந்து வாட்டுது என்னை
செண்பகமும் மல்லிகை மொட்டும்
வந்து வந்து வாட்டுது என்னை

கனவுகள் போலே கண்ணில் நீயே
வரும் நேரம்
மனதினில் பாலும் இன்பத் தேனும்
கலந்தோடும்

ஆடிப் பாடத்தான்
வரும் ஆசைத் தேரும் நீ

மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்
தேயாமலே பிறை போல் ஆகிறேன்

இருவர் : தாங்காது இனி தாங்காது
மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ