Malliye Chinna Mullaiyae |
---|
தன்னன்னா தினம்
தன்னன்னா தினம்
தன்னன் நன்னன் னா
தன்னன்னா தினம்
தன்னன்னா தினம்
தன்னன் நன்னன் னா
தன்னான தனா
தன்னான தனா னா ஹோ
இருவர் : தன்னன்னா தினம்
தன்னன்னா தினம்
தன்னன் நன்னன் னா
மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே
அல்லியே இன்ப வல்லியே
எந்தன் அருமருந்தே
வண்டாடும் மலர்ச்
செண்டாடும் குழலாடும் ஓ
மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே
அல்லியே இன்ப வல்லியே
உந்தன் அருமருந்தே
மாலைக்கும் தாலிக்கும்
வந்தது யோகம்
ஆஹா ஹா ஆஹா ஹா
காலைப் பொன் மேகங்கள்
மந்திரம் கூறும்
ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்
சேலைக்குள் சோலைப் பூ வாசம்
சேர்ந்திடும் மாசம் தை மாசம்
வேளைக்கு வேளை உன் மோகம்
விட்டு விடாமல் கை கூடும்
ஆனந்த வேகத்தில்
நான் வந்த நேரத்தில்
ஆடி வரும் குளிர்க் காற்றே
பூவென்ற தேகத்தில்
நான் நின்ற கோலத்தில்
பாடி வரும் புது ஊற்றே
நீராடும் உடல் போராடும்
உனைத் தேடும் ஓ
மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே
அல்லியே இன்ப வல்லியே
உந்தன் அருமருந்தே
சொக்கி நின்றாள் இந்த
சொக்கனின் மீனாள்
ஆஹா ஆஹா ஆஹா ஹா
சூடிக் கொண்டாள் என்னை
சொர்க்கத்தில் ஆண்டாள்
ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்
வாரிக் கொண்டடும் கண் ஜாடை
வஞ்சி நீராடும் பொன்னோடை
கோதை பொன் மேனி பூ மேடை
மேடைக்கு நான்தான் பொன்னாடை
நீ தொட்ட பாகங்கள்
தேன் மொட்டு போலன்று
தேடியதால் கனியானேன்
வாய்விட்டு நானொன்று
கேட்கின்றேன் தாவென்று
பாய் விரித்தேனடி மானே
அங்கங்கள் பசும் தங்கங்கள்
அள்ளும் நேரம் வா
மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே
அல்லியே இன்ப வல்லியே
உந்தன் அருமருந்தே
வண்டாடும் மலர்ச்
செண்டாடும் குழலாடும் ஓ
மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே
அல்லியே இன்ப வல்லியே
உந்தன் அருமருந்தே ஏ