Manadhil Konda Aasaigalai |
|---|
மனதில் கொண்ட ஆசைகளை
மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும்
பிரிந்து போய் விடு
மனதில் கொண்ட ஆசைகளை
மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும்
பிரிந்து போய் விடு
விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை
மண்ணின் மீதிலே
முளைப்பதெல்லாம் விளைவதில்லை
இந்த உலகிலே
விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை
மண்ணின் மீதிலே
முளைப்பதெல்லாம் விளைவதில்லை
இந்த உலகிலே
மலர்வதெல்லாம் மணப்பதில்லை
சோலை தன்னிலே
மலர்வதெல்லாம் மணப்பதில்லை
சோலை தன்னிலேஏஏ
வளர்ந்த அன்பு நிலைப்பதில்லை
பலரின் வாழ்விலே
வளர்ந்த அன்பு நிலைப்பதில்லை
பலரின் வாழ்விலேஏஏ
மனதில் கொண்ட ஆசைகளை
மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும்
பிரிந்து போய் விடு
ஒரு நிலாதான் உலவ முடியும்
நீல வானிலே
உணர்ந்த பின்னும் கலங்கலாமோ
உள்ளம் வீணிலே
ஒரு நிலாதான் உலவ முடியும்
நீல வானிலே
உணர்ந்த பின்னும் கலங்கலாமோ
உள்ளம் வீணிலே
உருகி உருகிக் கரைவதாலே
பயனும் இல்லையே
உருகி உருகிக் கரைவதாலே
பயனும் இல்லையே
ஓடிப் போன காலம் மீண்டும் வருவதில்லையே
ஓடிப் போன காலம் மீண்டும் வருவதில்லையே
மனதில் கொண்ட ஆசைகளை
மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும்
பிரிந்து போய் விடு
இருவர் : மனதில் கொண்ட ஆசைகளை
மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும்
பிரிந்து போய் விடு
