Manam Pona Pokkil

Manam Pona Pokkil Song Lyrics In English


மனம் போன போக்கில் போனேன்
என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன்
அதிகாலையில்

யார் நம்மை சேர்த்து வைத்தது
நம் கையில் என்ன உள்ளது
புது அன்பு ஒன்று தானே
விளையாடுது
அது நெஞ்சில் நின்றுதானே
புதிர் போடுது

நீர் இல்லாத பாலையில்
நிலவு போல நீயடி
நின்று காண இயலா
வழிப்போக்கன் நானடி

நீ மறுத்த போதிலும்
உன்னைத் தொடரும் வெண்ணிலா
அந்த ஒளியில் வீசும்
தினம் உந்தன் காலடி
கடல் நீரில் தாகம் தீருமா
கதைகள் இங்கே வாழ்கை ஆகுமா

மனம் போன போக்கில் போனேன்
என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன்
அதிகாலையில்

யார் நம்மை சேர்த்து வைத்தது
நம் கையில் என்ன உள்ளது
புது அன்பு ஒன்று தானே
விளையாடுது
அது நெஞ்சில் நின்றுதானே
புதிர் போடுது


காதல் வரிகள் பாடினால்
கானல் வரிகள் ஆகுமா
உனது கைகள் மீட்டும்
புதுப் பொண்ணின் வீணை நான்

வசந்தக் காலம் போன பின்
குயில்கள் கூவக் கூடுமோ
வந்து போகும் வசந்தம்
வாழ்வில் என்று தோன்றுமோ
கடலோரம் ஆடும் நீரலை
ஒரு போதும் ஓய்வதில்லையே

மனம் போன போக்கில் போனேன்
என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன்
அதிகாலையில்

யார் நம்மை சேர்த்து வைத்தது
நம் கையில் என்ன உள்ளது
இது தெரிந்து போகும் நேரம்
வழி அனுப்பவா
உன்னை அறிந்து கொண்ட நேரம்
நீ சென்று வா