Manamae Manamae Thadumaarum

Manamae Manamae Thadumaarum Song Lyrics In English


ஹாஆஅஆஅ
ஹாஆஅஆஅ

மனமே மனமே
தடுமாறும் மனமே
உள்ளுக்குள் இருந்தே
உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும் பொழுது
நீ சிறகு விரிக்காதே
பிரிந்து போன பிறகு
நீ சிதையும் வளர்க்காதே

மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு

மனமே மனமே
தடுமாறும் மனமே
உள்ளுக்குள் இருந்தே
உயிர் கொல்லும் மனமே

காதல் என்ற மாத்திரைக்கு
எப்போதும் இரண்டு குணம்
போட்டுக் கொண்டால்
போதையைக் கொடுக்கும்
போகப் போக துாக்கத்தைக் கெடுக்கும்

காதல் என்ற யாத்திரைக்கு
எப்போதும் இரண்டு வழி
வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும்
போகும் வழியோ இருளுக்குள் இருக்கும்

கண் மூடினால் தூக்கம் இல்லை
கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை
ஆலவிருட்சம் போல வளருது
அழகுப் பெண்ணின் நினைப்பு
வெட்டி எறிந்து பார்த்தேன்
மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு
என் நெஞ்சமே பகையானதே
உயிர் வாழ்வதே சுமையானதே

மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு


ஹாஆஅஆஅ
ஹாஆஅஆஅ

காதல் தந்த நினைவுகளை
கழட்டி எறிய முடியவில்லை
அலைகள் வந்து அடிப்பதனாலே
கரைகள் எழுந்து ஓடுவதில்லை

என்னை மறக்க நினைக்கையிலும்
அவளை மறக்க முடியவில்லை
உலை மூட மூடிகள் உண்டு
அலை கடல் மூடிட மூடிகள் இல்லை

காதலின் கையில் பூக்களும் உண்டு
காதலின் கையில் கத்தியும் உண்டு
பூக்கள் கொண்டு வந்து
நீ வாசம் வீசுவாயா
கத்தி கொண்டு வந்து
நீ கழுத்தில் வீசுவாயா
என் வாழ்விலே என்ன சோதனை
நான் வாழ்வதே என் வேதனை

மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு

மனமே மனமே
தடுமாறும் மனமே
உள்ளுக்குள் இருந்தே
உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும் பொழுது
நீ சிறகு விரிக்காதே
பிரிந்து போன பிறகு
நீ சிதையும் வளர்க்காதே

மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு