Manamalaiyum Manjalum

Manamalaiyum Manjalum Song Lyrics In English


மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்
மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

அண்ணன் விழிகள்
கண்ணீர் மழையில்
நனைந்தே நான் வாழ்த்தினேன்

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

தாழம்பூ கைகளுக்கு
தங்கத்தில் செய்த காப்பு
வாழைப்பூ கைகளுக்கு
வைரத்தில் செய்த காப்பு

உன் அண்ணன் போட வேண்டும்
ஊரெல்லாம் காண வேண்டும்
கல்யாண நாளில் இங்கே
கச்சேரி வைக்கவேண்டும்

சின்னஞ்சிறு கிளியே வாஆஅ
செம்பவழ கொடியே வாஆஅ
பிறை போல் நுதலில் அணியும் திலகம்
நிலையாய் வாழட்டுமே

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்


ஓராண்டு போனப் பின்பு
உன் பிள்ளை ஓடி வந்து
தாய் மாமன் தோளில் நின்று
பொன்னூஞ்சல் ஆடும் அன்று

ஏதேதோ காட்சி வந்து
கண்ணுக்குள் ஆடுதம்மா
ஆனந்த மின்னல் ஒன்று
நெஞ்சுக்குள் ஓடுதம்மா

குங்குமத்து சிமிழே வாஆ
சங்கம் தந்த தமிழே வாஆஅ
கொடியில் அரும்பி மடியில் மலர்ந்த
மலரே நீ வாழ்கவே

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

அண்ணன் விழிகள்
கண்ணீர் மழையில்
நனைந்தே நான் வாழ்த்தினேன்

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்