Manamalare Kanirasame |
---|
மண மலரே கனிரசமே
மாசில்லாத தங்கமே
வளரும் சந்திர பிம்பமே
மண மலரே கனிரசமே
மாசில்லாத தங்கமே
வளரும் சந்திர பிம்பமே
கனி வாயிதழின் புன்னகையால்
மனதைக் கவரும் கிளியே
கலை அழகு தவழும் சிலையேஏ
அழகு தவழும் சிலையே
கனி வாயிதழின் புன்னகையால்
மனதைக் கவரும் கிளியே
கலை அழகு தவழும் சிலையேஏ
அழகு தவழும் சிலையே
உனை எண்ணி உள்ளம் மகிழுதடா
எனது அன்பின் வெள்ளமே
இனிக்கும் மழலைச் செல்வமே
மண மலரே கனிரசமே
மாசில்லாத தங்கமே
வளரும் சந்திர பிம்பமே
பழமும் பாலும் ஊட்டி உன்னை
பள்ளிக்கூடம் அனுப்புவேன்
படித்து நீயும் அரிய பெரிய
பட்டம் வாங்கித் திரும்புவாய்
படித்து நீயும் அரிய பெரிய
பட்டம் வாங்கித் திரும்புவாய்
அதை எண்ணி உள்ளம் மகிழுதடா
எனது அன்பின் வெள்ளமே
இனிக்கும் மழலைச் செல்வமே
மண மலரே கனிரசமே
மாசில்லாத தங்கமே
வளரும் சந்திர பிம்பமே