Manamey Nee |
---|
மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே
வாழ்க்கை பாதையில்
மேடு பள்ளங்கள்
வரலாம் அதனால் வாழ்வே
வாடிப் போகுமோ
மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே
வாராத செல்வங்கள்
வாழ்வினில் வந்தாலே
சேராத சொந்தங்கள் சேர்ந்தாடுமே
இல்லாமல் போனாலே
ஏழையாயும் ஆனாலே
தன் தேக நிழல் கூட பகையாகுமே
தன் கையே வாழ்விலே
தக்க துணை ஆகுமே
தன் கையே வாழ்விலே
தக்க துணை ஆகுமே
இருள் போனால் ஒளியாகும்
மரமே பழுத்தால் பறவைகள்
கிளையில் பாடுமே
மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே
நாட்டுக்கு நாள்தோறும்
உழைத்திடும் நல்லோரை
எல்லோரும் மலர் தூவிக்
கொண்டாடுவார்
எந்நாளும் தேயாத
காவியக் கதையாகி
சரித்திரப் பொன்னேட்டில்
உயிர் வாழுவார்
தெய்வீகம் என்பது அன்பு
செய்து வாழ்வது
தெய்வீகம் என்பது அன்பு
செய்து வாழ்வது
விதையாகி விழும் போது
பயிராய் கதிராய் உலகினில்
அறங்கள் தழைக்குமே
மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே
வாழ்க்கை பாதையில்
மேடு பள்ளங்கள்
வரலாம் அதனால் வாழ்வே
வாடிப் போகுமோ
மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே