Manamuvandha Maaran |
---|
மனமுவந்த மாறன்
சொந்தம் சேருமா
மனமுவந்த மாறன் சொந்தம் சேருமா
வலுவில் எனை மணந்த
கிழவன் மனம் மாறுமா
அழகை விழிகள் காணவே நேருமா
வலது விழி குருடன்
புகழ்ந்திடவே நேருமா
நேசமெல்லாம் கானல் நீர்போலே
நீணிலமேல் மாறுமா கைகூடுமா
நேசமெல்லாம் கானல் நீர்போலே
நீணிலமேல் மாறுமா கைகூடுமா
காலம்போன காமுகன்
கல்யாணம் உண்மையாகுமா
காலம்போன காமுகன்
கல்யாணம் உண்மையாகுமா
கவலையது தீருமா காலம் வீண் போமா
அனுகூலம் உண்டாமா
வலுவில் எனை மணந்த
கிழவன் மனம் மாறுமா