Manasukkul |
---|
அடியேஏஏஅம்முலு
அரங்கேறப் போகிறது உன் அந்தரங்கம்
உன் காதலுக்கு இங்கொரு கவியரங்கம்
ம்ம்ஆஹா
மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்
இளகாத என் நெஞ்சில்
இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு
வடம் பிடித்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்
காதலின் செய்திகள் கண்களில் உள்ளது
அதை நான் படிக்க மொழி கிடையாது
காதலே நம்மிடம் கையொப்பம் கேட்டது
இனிமேல் உலகில் தடை கிடையாது
நாணம் கொண்டதே என் பூவனம்
பெண்மை ஒன்றுதான் என் சீதனம்
அடடா
ஆஅஆஆஆஆ
அடடா இது தான் ஆலிங்கனம்
மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்
கண்களில் காதலின்
முன்னோட்டம் பார்த்தபின்
இதயம் முழுதும் எதிரொலி கேட்டேன்
மாலையில் சோலையில்
இளந்தென்றல் வேளையில்
காண்போம் கற்போம் என்றுனைக் கேட்டேன்
கண்மணிப் பூங்காவில் காத்திருந்தேன்
கண்ணே தடங்கலுக்கு வருத்தம் சொன்னேன்
விழியில்
ஆஅஆஆஅஆ
விழியில் ஒளியும் ஒலியும் கண்டேன்
மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்
இளகாத என் நெஞ்சில்
இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு
வடம் பிடித்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்