Manasula Enna Nenache |
---|
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
மனசுல என்ன நெனச்சே
மழலையில் சொல்லிடய்யா
வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா
மனசில என்ன நெனச்சே
மழலையில் சொல்லிடய்யா
வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா
உன்னுடைய புன்னகையில்
உறங்கும் வெண்ணிலவு
உன்னப் பெத்த புண்ணியத்தில்
மயங்கும் பெண்ணிலவு
மனசுல என்ன நெனச்சே
மழலையில் சொல்லிடய்யா
வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா
என் கதை கேளடா
துன்பம் எத்தனை நாளடா
மண் தரை மீதிலே நான் சிந்திய பாலடா
ஒரு தெய்வமும் வந்தது
இங்கு தஞ்சமும் தந்தது
அந்த நன்றியை நானும்தான்
இங்கு எப்படி சொல்வது
இங்கு காலம்தான் நாம் சேர
பாலங்ககள் இட்டதம்மா
எதிர்பாராமல் தேடாமல் பாசமும்
நேசமும் வாசலில் வந்தது
மனசில என்ன நெனச்சே
மழலையில் சொல்லிடடா
வருத்தம் இருந்தா மாறுகிற நேரமடா
பூமரச் சோலைகள்
என்றும் பூமிக்கு பாரமா
சூடிடும் மாலைகள்
என்றும் சாமிக்கு பாரமா
பிறை சந்திரன் கூடத்தான்
கறை கொண்டது பாரம்மா
குறை உள்ளது என்பதால்
வானம் கை விட்டு போகுமா
இந்த ரோஜாவும் முள்ளோடு
உன்னிடம் வந்ததய்யா
உன் தோள் மீது நாள்தோறும்
நானொரு பாரமோ நீயொரு பாரமோ
மனசுல என்ன நெனச்சே
மழலையில் சொல்லிடய்யா
வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா
உன்னுடைய புன்னகையில்
உறங்கும் வெண்ணிலவு
உன்னப் பெத்த புண்ணியத்தில்
மயங்கும் பெண்ணிலவு
மனசுல என்ன நெனச்சே
மழலையில் சொல்லிடடா
வருத்தம் இருந்தா மாறுகிற நேரமடா
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்