Manathile Oru Paattu Female |
---|
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோலம்
விழிப்பூவும் மலரும் காலை நேரம்
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
கோடை நீர் மேகம் கூடும்
கோடி சங்கீதம் பாடும்
பார்வை நீயென்று தேடும்
பாசம் நெஞ்சோடு மூடும்
கவிஞன் பாடாத
கவிதை நீயே
மொழியில் கூறாத
எனது தாயே
இது ஒரு சுக ராகம்
இதில் வரும் பல பாவம்
படிக்கிறேன் படிக்கிறேன்
மழை மேகம் கூட வாழ்த்து கூறும்
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
நீயும் நூறாண்டு வாழ
நேரம் பொன்னாக மாற
நானும் பாமாலை போட
தோளில் நான் வந்து சூட
எனது ராகங்கள் எழுதும் வேதம்
புதிய தாகங்கள் விழியில் ஊறும்
எனது ராகங்கள் எழுதும் வேதம்
புதிய தாகங்கள் விழியில் ஊறும்
எழுந்து வா இளம் பூவே
இசையிலே அழைத்தேனே
இனிமைகள் தொடர்கதை இனி
சோகம் ஏது சேரும் போது
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோலம்
விழிப் பூவும் மலரும் காலை நேரம்
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு