Manathin Saalayil |
---|
மனதின் சாலையில்
மாவிலை தோரணம்
அருகில் தேவதை வாசனை காரணம்
பூமியே ஒரு பூவாய் மாறுதே
வாழ்க்கை குளிர் தீவாய் தோன்றிடுதே
காணா காணா காட்சியெல்லாம்
தானாய் தானாய் தெரிகிறதே
தீரா தீரா ஆசை எல்லாம்
தீயாய் தீயாய் எரிகிறதே
திண்டாடி திண்டாடி
திசை தெரியாத ஏக்கம்
கொண்டாடி கொண்டாடி
கொலை வெறியோட தாக்கம்
முதல் முறை இது போல
ஒரு வித ஆசை அட
புளி தின்ன பல்லாக கூசுது பேச
உள்ள ஏதோ ஊறுதடி
உசுரே போகுதடி
உலகம் தலை கீழாச்சே
எது என்ன தோனலடி
இதயம் காணலடி
நெருப்பு இலை போட்டு
பனிச்சோறு பரிமாறாதேஏ
காணா காணா காட்சியெல்லாம்
தானாய் தானாய் தெரிகிறதே
தீரா தீரா ஆசை எல்லாம்
தீயாய் தீயாய் எரிகிறதே
ஓஉன்னோடு உன்னோடு
நான் கை கோர்த்து போனால்
விண்ணோடு விண்ணோடு
மனம் விளையாடும் தானா
அறிகுறி காட்டாம்மா
அடை மழை பெய்ய
என் இட வலம் புரியாம
நான் என்ன செய்ய
காஞ்ச மரம் பூக்குதடி
கனவா தாக்குதடி
தெளிவா தொலைஞ்சே போனே
சட்டக்குள்ள வேர்க்குதடி
சங்கீதம் கேக்குதடி
எதுவும் புரியாம இள நெஞ்சம்
குளமா மாற
காணா காணா காட்சியெல்லாம்
தானாய் தானாய் தெரிகிறதே
தீரா தீரா ஆசை எல்லாம்
தீயாய் தீயாய் எரிகிறதே
மனதின் சாலையில்
மாவிலை தோரணம்
அருகில் தேவதை வாசனை காரணம்
பூமியே ஒரு பூவாய் மாறுதே
வாழ்க்கை குளிர் தீவாய் தோன்றிடுதே
காணா காணா காட்சியெல்லாம்
தானாய் தானாய் தெரிகிறதே
தீரா தீரா ஆசை எல்லாம்
தீயாய் தீயாய் எரிகிறதே