Mangala Kungumam |
---|
மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
காதல் கல்யாணம்
காமன் ஊர்கோலம்
இருவர் : இனி ஏந்நாளும் சந்தோஷம்தான்
மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
வாழையும் தோரணமும்
மணமாலையும் மங்கலமும்
அது கண்டது சங்கமமே
ஒரு காவியம் ஆரம்பமே
காலையில் மணவறைதான்
வரும் மாலையில் தனியறைதான்
அந்த ஆனந்தம் பல முறைதான்
அதன் ஆரம்பம் உன்னிடம்தான்
பாதையை மாறிய கால்கள் இது
பாவலன் உன் வழி தேடியது
காதலன் உன் இரு கால்களிலே
கண்களும் பூவினைத் தூவியது
நானும் உனக்காக
உயிரோடு இன்னும் வாழ்கிறேன்
மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
கண் வழி வந்தவளே
என் நெஞ்சினில் நின்றவளே
இளம் பெண்ணெனும் பேரழகே
இனி உன் மனம் என்னுலகே
உன் உடல் கோவிலிலே
நான் என் உயிர் வாழ்ந்திருப்பேன்
உன் உறவினைக் காண்பதற்கே
நான் மறுபடி பிறந்திருப்பேன்
எத்தனை ஜென்மும் சேர்ந்திருப்போம்
அத்தனை இன்பமும் பார்த்திருப்போம்
சத்திய சோதனை தீர்ந்ததடி
சங்கமம் ஆனது நதிகளடி
பாலும் தெளித் தேனும்
பரிமாறும் இந்த நாயகி
மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
காதல் கல்யாணம்
காமன் ஊர்கோலம்
இருவர் : இனி எந்நாளும் சந்தோஷம்தான்
மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம்
ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி