Mangala Mangaiyum Maappillaiyum |
---|
பெண்கள் : மங்கல மங்கையும்
மாப்பிள்ளையும் அன்று
கைகள் கலந்தாட
மஞ்சள் முகத்தில் வெண்பிறை நெற்றியில்
வேர்வை வழிந்தோட
சங்கொலி பொங்கிடப் பஞ்சணையில்
ஒரு சம்பவம் உண்டாக
தாமரைக் கோவிலில் பிள்ளை வளர்ந்தான்
மல்லிகைச் செண்டாக
பெண்கள் : மல்லிகைச் செண்டாக
பெண்கள் : மங்கல மங்கையும்
மாப்பிள்ளையும் அன்று
கைகள் கலந்தாட
மஞ்சள் முகத்தில் வெண்பிறை நெற்றியில்
வேர்வை வழிந்தோட
சங்கொலி பொங்கிடப் பஞ்சணையில்
ஒரு சம்பவம் உண்டாக
தாமரைக் கோவிலில் பிள்ளை வளர்ந்தான்
மல்லிகைச் செண்டாக
பெண்கள் : மல்லிகைச் செண்டாக
பேரு விளங்க நாளைக்கு
பிறக்கப்போகும் காளைக்கு
பேரு விளங்க நாளைக்கு
பிறக்கப்போகும் காளைக்கு
துள்ளும் அழகுத் தோளுக்கு
சொல்லி வைத்தோம் மாலைக்கு
துள்ளும் அழகுத் தோளுக்கு
சொல்லி வைத்தோம் மாலைக்கு
பிள்ளை அழகும் பிஞ்சு முகமும்
கிள்ளிய வெற்றிலை பாக்கு
சிறு எள்ளுப் பூவை அழகு பார்க்கும்
இளைய கண்ணனின் மூக்கு
பெண்கள் : இளைய கண்ணனின் மூக்கு
பெண்கள் : மங்கல மங்கையும்
மாப்பிள்ளையும் அன்று
கைகள் கலந்தாட
மஞ்சள் முகத்தில் வெண்பிறை நெற்றியில்
வேர்வை வழிந்தோட
சங்கொலி பொங்கிடப் பஞ்சணையில்
ஒரு சம்பவம் உண்டாக
தாமரைக் கோவிலில் பிள்ளை வளர்ந்தான்
மல்லிகைச் செண்டாக
பெண்கள் : மல்லிகைச் செண்டாக
கோடைக் காலம் பிறக்கும்
பிள்ளை குப்புறத் திரும்பிப் படுக்கும்
கோடைக் காலம் பிறக்கும்
பிள்ளை குப்புறத் திரும்பிப் படுக்கும்
ஆடும் வசந்தம் சிரிக்கும்
அது அம்மா என்றுன்னை அழைக்கும்
ஆடும் வசந்தம் சிரிக்கும்
அது அம்மா என்றுன்னை அழைக்கும்
அம்மா முகமும் அப்பா குணமும்
அமைந்து பிறக்கும் பிள்ளை
அதன் அழகை நன்றாய் அளந்து வைக்க
தமிழில் வார்த்தை இல்லை
இருவர் : தமிழில் வார்த்தை இல்லை
பெண்கள் : ஆஆஆஅஆஅஆஆஅஆ
ஓஒஓஓஓஓஓஒஓஒஓஒ
பெண்கள் : மங்கல மங்கையும்
மாப்பிள்ளையும் அன்று
கைகள் கலந்தாட
மஞ்சள் முகத்தில் வெண்பிறை நெற்றியில்
வேர்வை வழிந்தோட
சங்கொலி பொங்கிடப் பஞ்சணையில்
ஒரு சம்பவம் உண்டாக
தாமரைக் கோவிலில் பிள்ளை வளர்ந்தான்
மல்லிகைச் செண்டாக