Mangalyam

Mangalyam Song Lyrics In English


மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்
மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்

நான் காற்றில் அலைகிற தீபம்
துன்ப கடலில் தள்ளாடும் ஓடம்
நான் காற்றில் அலைகிற தீபம்
துன்ப கடலில் தள்ளாடும் ஓடம்

மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்

அன்னைகளே தந்தைகளே
உங்களையே நம்பி வரும் பிள்ளை நானே
காவலனை கோவலனை பார்த்திடவே
கானலிலே துள்ளும் மீனே

நல்லதை நாடும் உள்ளத்தை தேடி
இல்லங்கள் தோறும் நடப்பென்னே
ஊரே உறங்கிய போதும்
என் உள்ளம் தூங்கவில்லையே
என் வாழ்வில் என்றும் அந்த துன்பம்
அதை யாரும் காணவில்லையே

மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்


மஞ்சளுடன் குங்குமமும் மாங்கல்யமும்
தங்கிடும் இல்லம் தோறும்
மாடியிலும் கூரையிலும் தாலி இல்லா
பெண் மனதில் துன்பம் கூடும்

ஒவ்வொரு மாதம் உங்களை பேசும்
உண்டியல் போடும் நெஞ்சங்களே
உதவும் இதயங்கள் யாவும் என் வாழ்வில்
காவல் தெய்வம்தான்
துளி முத்தாய் சேரும் இந்த வெள்ளம்
நான் தேடி போகும் செல்வம்தான்

மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்

நான் காற்றில் அலைகிற தீபம்
துன்ப கடலில் தள்ளாடும் ஓடம்
நான் காற்றில் அலைகிற தீபம்
துன்ப கடலில் தள்ளாடும் ஓடம்

மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்