Mangalyam |
---|
மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்
மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்
நான் காற்றில் அலைகிற தீபம்
துன்ப கடலில் தள்ளாடும் ஓடம்
நான் காற்றில் அலைகிற தீபம்
துன்ப கடலில் தள்ளாடும் ஓடம்
மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்
அன்னைகளே தந்தைகளே
உங்களையே நம்பி வரும் பிள்ளை நானே
காவலனை கோவலனை பார்த்திடவே
கானலிலே துள்ளும் மீனே
நல்லதை நாடும் உள்ளத்தை தேடி
இல்லங்கள் தோறும் நடப்பென்னே
ஊரே உறங்கிய போதும்
என் உள்ளம் தூங்கவில்லையே
என் வாழ்வில் என்றும் அந்த துன்பம்
அதை யாரும் காணவில்லையே
மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்
மஞ்சளுடன் குங்குமமும் மாங்கல்யமும்
தங்கிடும் இல்லம் தோறும்
மாடியிலும் கூரையிலும் தாலி இல்லா
பெண் மனதில் துன்பம் கூடும்
ஒவ்வொரு மாதம் உங்களை பேசும்
உண்டியல் போடும் நெஞ்சங்களே
உதவும் இதயங்கள் யாவும் என் வாழ்வில்
காவல் தெய்வம்தான்
துளி முத்தாய் சேரும் இந்த வெள்ளம்
நான் தேடி போகும் செல்வம்தான்
மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்
நான் காற்றில் அலைகிற தீபம்
துன்ப கடலில் தள்ளாடும் ஓடம்
நான் காற்றில் அலைகிற தீபம்
துன்ப கடலில் தள்ளாடும் ஓடம்
மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்