Mangalyam Thavazhum Magarasi |
---|
பாடல் ஆசிரியர் : வாலி
மாங்கல்யம் தவழும் மகராசி வதனம் மலர்ந்தாலே போதும் வேறேது உலகம் மாங்கல்யம் தவழும் மகராசி வதனம் மலர்ந்தாலே போதும் வேறேது உலகம் நீதானே எங்கள் திருக்கோயில் விளக்கு நீ இல்லை என்றால் தெரியாது கிழக்கு
ஆனந்தம் விளையாடும் வீடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு இது ஆனந்தம் விளையாடும் வீடு
வேர் போல நானும் நீர் போல நீயும் நீரோடி போனால் வேர் வாடி போகும் வேர் போல நானும் நீர் போல நீயும் நீரோடி போனால் வேர் வாடி போகும் நீ வேண்டும் என்று தெய்வங்கள் கேட்டால் உனை இங்கு நிறுத்தி நான் அங்கு செல்வேன்
ஆனந்தம் விளையாடும் வீடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு இது ஆனந்தம் விளையாடும் வீடு இது