Manidha Manidha |
---|
மனிதா மனிதா இனி
உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
லல லா லல லா லல லா லல லா
லல லா லால்லல லல லா
விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்
மனிதா மனிதா இனி
உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
லல லா லல லா லல லா லல லா
லல லா லால்லல லல லா
சில ஆறுகள் மீறுதடா
வரலாறுகள் மாறுதடா
பசியால் பல ஏழைகள் சாவது என்பது
தேசியமானதடா
இனி தேன் வரும் என்பதும்
பால் வரும் என்பதும் ஜோசியமானதடா
அட சாட்டைகளே இனித்
தீர்வுகள் என்பது சூசகமானதடா
மனிதா மனிதா இனி
உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்
மனிதா மனிதா இனி உன்
விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
ஒளி வீசுக சூரியனே
யுகம் மாறுது வாலிபனே
ஒரு தோல்வியிலாப் புது வேள்வியினால்
இனி சோதனை தீர்ந்து விடும்
சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள்
பூமியில் தோன்றி விடும்
அட சாமரம் வீசிய பாமர ஜாதிகள்
சாதனை கண்டு விடும்
மனிதா மனிதா இனி
உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
மனிதா மனிதா இனி
உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்
மனிதா மனிதா இனி உன்
விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
அனைவரும் : மனிதா மனிதா இனி உன்
விழிகள் சிவந்தால் உலகம் விடியும்