Manidhan Ninaippadhundu

Manidhan Ninaippadhundu Song Lyrics In English


மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று

மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று

மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று

தந்தை தவறு செய்தார்
தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார்
தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும்
வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கிறது
மயக்கம் வருகின்றது
அழுது லாபமென்ன
அவன் ஆட்சி நடக்கின்றது

மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று


காட்டு மனமிருந்தால்
கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால்
கவலை வளர்ந்துவிடும்
கூட்டை திறந்து விட்டால்
அந்த குருவி பறந்து விடும்
காலில் விலங்கும் இட்டோம்
கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம்
நாட்டியம் ஆடுகின்றோம்

மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று

விதியின் ரதங்களிலே நாம்
விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா
சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை
என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன்
ஒரு கவலை முடிந்ததடா

மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று