Manikkuyilu Satham

Manikkuyilu Satham Song Lyrics In English


மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே

மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மகன் வரவ பாட்டெடுத்து பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே

துள்ளுதடி உள்ளம் எல்லாம் அதுவா அதுவா சொல்லுதடி என்னென்னவோ மெதுவா மெதுவா அன்னை என்னும் பேர் உனக்கு பொதுவா பொதுவா பிள்ளை தரப் போகுதடி அதுவா அதுவா

மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மயிலே

நாட்டினிலே பேரெடுக்கும் பிள்ளை ஒன்னு வீட்டினிலே எனக்கு நீ பெத்துக் கொடு உனக்கு வழி காட்டுகிற ஓர் மகனை நான் தருவேன் அவனிடம் கத்துக் கொள்ளு

அவன் வரும் நன் நாளில் அன்பு கொண்டு மழை பொழியும் என்றும் என்றும் காணாத பொன் விளையும் மண் செழிக்கும்

கனவு கண்டா கண்டதப் போல பலிக்கணும் நெனச்சதெல்லாம் நெனச்சபடி நடக்கணும் மகராசி உன் முகராசியும் அவன் ராசிதான்

மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மகன் வரவ பாட்டெடுத்து பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே மயிலே


தவழ்ந்து வரும் எழுந்து விளையாடி வரும் வரம் கொடுத்த தெய்வமே தெய்வமே பொங்கி வரும் இன்பம் வரும் பிள்ளை தரும் மனம் குறையாச் செல்வமே செல்வமே

சின்னஞ்சிறு பூ மழலை வண்ண வண்ண அடி எடுக்க மின்னல் வந்து வான் மீது வெண்ணிலவு கதை படிக்கும் அவன் பிறந்த மண்ணுக்கு நல்ல பேர் வரணும் பெற்றவருக்கு வாழ்த்துச் சொல்ல ஊர் வரணும்

வண்ணக் கோலங்கள் வரும் காலங்கள் நலமாகுமே

மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மகன் வரவ பாட்டெடுத்து பாடுதா பாடுதா ஒயிலே ஒயிலே

துள்ளுதடி உள்ளம் எல்லாம் அதுவா அதுவா சொல்லுதடி என்னென்னவோ மெதுவா மெதுவா அன்னை என்னும் பேர் உனக்கு பொதுவா பொதுவா பிள்ளை தரப் போகுதடி அதுவா அதுவா

மணிக் குயிலு சத்தம் ஒனக்கு கேக்குதா கேக்குதா மயிலே மயிலே மயிலே