Manikuyil Isaikkuthadi Male

Manikuyil Isaikkuthadi Male Song Lyrics In English


மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி

மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளம் குருவிகள் பறந்ததடி
அடி மானே மயங்குவதேனோ
உனைத்தானே உருகுவதேனோ
இளம் காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா

மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளம் குருவிகள் பறந்ததடி

கட்டழகு தோட்டம் கண்டால்
கம்பன் மகன் நானம்மா
சிட்டு விழி சேதி சொன்னால்
அந்த சுகம் தேனம்மா

பட்டம் விட்டு வாழும் வாழ்க்கை
இன்று வந்து கூடுமோ
சட்ட திட்டம் ஏதும் இல்லா
பிள்ளை குணம் ஆகுமோ
ஊர்கோலம் போகும் கார்கால மேகம்
பூக் கோலம் நாளும்தான்
இளம் காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா

மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளம் குருவிகள் பறந்ததடி
அடி மானே மயங்குவதேனோ
உனைத் தானே உருகுவதேனோ
இளம் காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா


மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளம் குருவிகள் பறந்ததடி

ஆற்று நீரில் ஆட்டம் போட்டு
ஆடி வந்த நாட்களும்
நேற்று வந்த காற்று போலே
நெஞ்சை விட்டுப் போகுமா

அந்தி வந்து சேர்ந்த பின்னே
நாள் முடிந்து போனதா
சந்தனம்தான் காய்ந்த பின்னே
வாசம் இன்றிப் போனதா
நீராடும் மேகம் தாலாட்டுக் கேளு
ஊர்கோலம் என்றும்தான்
இளம் காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா

மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளம் குருவிகள் பறந்ததடி
அடி மானே மயங்குவதேனோ
உனைத்தானே உருகுவதேனோ
இளம் காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா

மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளம் குருவிகள் பறந்ததடி