Manmadha Ragangale Saba

Manmadha Ragangale Saba Song Lyrics In English


ஹாஆஹாஆஅ மன்மத ராகங்களே சபா மன்னவர் கேளுங்களேன் மன்மத ராகங்களே சபா மன்னவர் கேளுங்களேன் வானகத் தாரகை இறங்கி வந்தேன் வாள்விழி மேனகை மயங்கி நின்றேன் மாலையில் மையலில் இளமனம் இசைத்தது மன்மத ராகங்களே சபா மன்னவர் கேளுங்களேன்

விழிகள் இரண்டும் துயிலவில்லை விரக தாபம் தணியவில்லை இனியும் தாங்க வலிமை இல்லை அருள் தரும் திருவுள்ளம் அடைக்கலம் கொடுக்குமோ உயிரை உருக்கிட

மன்மத ராகங்களே சபா மன்னவர் கேளுங்களேன்

இயற்கை தந்த உறவுகளை இளமை தந்த கனவுகளை இயற்கை தந்த உறவுகளை இளமை தந்த கனவுகளை தடுக்க என்ன உரிமைகளோ தவத்தில் என்ன பெருமைகளோ

மழை முகில் தணல் பொழிய விழிகளில் புனல் வடிய நிலவென்னும் துகில் அவிழ கலவியில் மனம் நெகிழ

பருவ மேனி விரக வேள்வி புரியும் போது பதவி ஏது


செவ்வரி ஓடிய கண்களில் அஞ்சனம் கரைந்திட

சேயிழை கைகளில் மேவிய கைவளை கழன்றிட

மலரணையில் மதன் கணையில் உடல் விழுந்தது அதில் எழுந்தது

மன்மத ராகங்களே சபா மன்னவர் கேளுங்களேன் வானகத் தாரகை இறங்கி வந்தேன் வாள்விழி மேனகை மயங்கி நின்றேன் மாலையில் மையலில் இளமனம் இசைத்தது மன்மத ராகங்களே சபா மன்னவர் கேளுங்களேன்