Mann Veettil Irundhaalum

Mann Veettil Irundhaalum Song Lyrics In English


எல்லோர்க்கும் நிழலான தாயே
பொல்லாத பழி உந்தன் மீதோ
குலமாதரை குறை சொல்வதோ
இது தான் முறையோ இறைவா

மண் வீட்டில் இருந்தாலும்
மணிமாடம் வாழ்ந்தாலும்
எல்லோர்க்கும் தாயாக
இருந்தாயம்மா இருந்தாயம்மா

மண் வீட்டில் இருந்தாலும்
மணிமாடம் வாழ்ந்தாலும்
எல்லோர்க்கும் தாயாக
இருந்தாயம்மா இருந்தாயம்மா

ஒரு பிள்ளை அங்கே
சிறைச்சாலை தன்னில்
ஒரு பாவம் அறியா தாய்
இந்த மண்ணில்

மண் வீட்டில் இருந்தாலும்
மணிமாடம் வாழ்ந்தாலும்
எல்லோர்க்கும் தாயாக
இருந்தாயம்மா இருந்தாயம்மா

பசும் பாலைக் கள் என்று
கூறும் இந்த உலகம்
கழி நீரை கங்கை என
நாம் குடிக்கக் கொடுக்கும்

தாய்க்குலத்தை மேடை இட்டு
தெய்வம் என்று போற்றும்
பேசியதைக் காற்றில் விட்டு
வேசி என்று தூற்றும்

தாயின் மரணம் பிள்ளை அறிந்தும்
தீயில் புழுவாய் நெஞ்சு துடிக்கும்
அன்னைக்கொரு கொள்ளி இட
பிள்ளை வருமோ


மண் வீட்டில் இருந்தாலும்
மணிமாடம் வாழ்ந்தாலும்
எல்லோர்க்கும் தாயாக
இருந்தாயம்மா இருந்தாயம்மா

ஈன்றெடுத்த தாயும் அல்ல
எங்களுக்கு நீயே
இடம் கொடுத்து உணவளித்து
உடல் வளர்த்த தாயே

நீ கொடுத்த தோள் கொடுத்து
உனைச் சுமக்கும் கடமை
நேர்ந்ததென்ன எங்களுக்கு
நாங்கள் செய்த கொடுமை

உன் வயிற்றிலா
நாங்கள் பிறந்தோம்
கொள்ளி இடவா
நாங்கள் வளர்ந்தோம்
தாங்கவில்லை போதும்
இந்தக் கொடுமையம்மா

மண் வீட்டில் இருந்தாலும்
மணிமாடம் வாழ்ந்தாலும்
எல்லோர்க்கும் தாயாக
இருந்தாயம்மா இருந்தாயம்மா

ஒரு பிள்ளை அங்கே
சிறைச்சாலை தன்னில்
ஒரு பாவம் அறியா தாய்
இந்த மண்ணில்

மண் வீட்டில் இருந்தாலும்
மணிமாடம் வாழ்ந்தாலும்
எல்லோர்க்கும் தாயாக
இருந்தாயம்மா இருந்தாயம்மா