Mannavar Paadum Tamizh |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆரிரோஆரோ ஆராரிரோ
ஆரிரோஆரோ ஆராரிரோ
மன்னவர் பாடும் தமிழ் பிறந்த
தென்பாண்டி முத்தே முத்தே
புண்ணியர் தேடும் புவி பிறந்த
பூ மஞ்சள் கொத்தே கொத்தே
உன்னை சொந்தம் கொள்ள
அந்த மன்னன் இல்லை
நாமும் தங்கும் இடம் அது சொந்தமில்ல
ஆரிரோஆரோ ஆராரிரோ
ஆரிரோஆரோ ஆராரிரோ
கேடு கேட்டு போனாலும் மனம்
கெட்டு மட்டும் போகாது
மாரு வத்திப் போனாலும் தாயின்
மனசு வத்தி போகாது
வாடாமல்லி உன்னை காத்திருப்பேன் நம்ம
சாமி துணை நான் பாத்திருப்பேன்
வேறொருத்தி வீட்டு வாசலிலே
கை நீட்டி நான் போயி நின்னதில்ல
தேரிழுக்கும் ஊரு வீதியிலே
பேரு கெட்டு போக ஏதும் கேட்டதில்ல
சாமியும்தான் கண் திறக்கும்
காலம் வரை பொறுத்திருப்போம்
வருந்தாதே வரும் காலம் பாடும் ஏழைக்குத்தான்
மன்னவர் பாடும் தமிழ் பிறந்த
தென்பாண்டி முத்தே முத்தே
புண்ணியர் தேடும் புவி பிறந்த
பூ மஞ்சள்
உன்னை சொந்தம் கொள்ள
இந்த மன்னன் உண்டு
நீ வந்த இடம் இன்பம் தங்கும் அங்கு
ஆரிரோஆரோ ஆராரிரோ
ஆரிரோஆரோ ஆராரிரோ
நித்தமொரு துன்பம் வந்து ஏழை
வீடுகளில் கதவைத் தட்டும்
நாளுமொரு துக்கம் வந்து ஏழை
மாதர்களின் நெஞ்சைத் தட்டும்
ஏழு நாளும் இங்கு வெள்ளி இல்ல
நல்ல நாளும் இனி தள்ளி இல்ல
ஆனைக் கட்டி வாழும் மன்னவனும் உன்
ஆணை கேக்க வாசலில் காத்திருப்பான்
சேனைக் கொண்டு வந்து செல்வர்களும் ஒரு
சேதி சொல்ல உன்னை எதிர்ப்பார்த்திருப்பார்
கண்ணேறு வந்துவிடும் கனியே
உன் கண்ணழகு
வருங்காலம் நமதேதான் வாடாதே கண்ணே
மன்னவர் பாடும் தமிழ் பிறந்த
தென்பாண்டி முத்தே முத்தே
புண்ணியர் தேடும் புவி பிறந்த
பூ மஞ்சள் கொத்தே கொத்தே
உன்னை சொந்தம் கொள்ள
இந்த மன்னன் உண்டு
நீ வந்த இடம் இன்பம் தங்கும் அங்கு
ஆரிரோஆரோ ஆராரிரோ
ஆரிரோஆரோ ஆராரிரோ