Mannil Vandha Nilave |
---|
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
அன்பு கொண்ட செல்லக் கிளி
கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா
நிலவேமலரே
நிலவே மலரே மலரின் இதழே
இதழின் அழகே
எட்டி நிற்கும் வானம்
உன்னைக் கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்
அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்
தொட்டுத் தொட்டு நீராட்டும்
எட்டி நிற்கும் வானம்
உன்னைக் கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்
அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்
தொட்டுத் தொட்டு நீராட்டும்
விழிகளில் கவிநயம் விரல்களில் அபிநயம்
கண்ணே நீ காட்டு
விடிகிற வரையினில் மடியினில் உறங்கிடு
பாடல் நீ கேட்டு
நிலவே மலரே
நிலவே மலரே மலரின் இதழே
இதழின் அழகே
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
புன்னை இலை போலும்
சின்ன மணிப் பாதம்
மண்ணில் படக் கூடாது
பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து
கண்கள் படக் கூடாது
புன்னை இலை போலும்
சின்ன மணிப் பாதம்
மண்ணில் படக் கூடாது
பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து
கண்கள் படக் கூடாது
மயில்களின் இறகினில் அழகிய விழிகளை
நீதான் தந்தாயோ
மணிக்குயில் படித்திடும் கவிதையின் இசையென
நீதான் வந்தாயோ
நிலவே மலரே
நிலவே மலரே மலரின் இதழே
இதழின் அழகே
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
அன்பு கொண்ட செல்லக் கிளி
கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா
நிலவேமலரே