Mannile Mannile |
|---|
மண்ணிலே
மண்ணிலே வந்து
உடையுது வானம்
மழையிலே
கரையுதே ரெண்டு
மனங்களின் தூரம்
காதில் கேட்கும்
இடி ஓசை காதல்
நெஞ்சின் பரிபாஷை
மழையை
போலே உறவாட
மனதில் என்ன பேராசை
நீரில் எழுதும்
காதல் அழியும் மழை
நீரே எழுதிடும் காதல்
அழியாதே
ஐ லவ் யூ
ஷைலஜா ஷைலஜா
ஓ ஷைலு ஷைலு
ஐ லவ் யூ ஷைலஜா
ஷைலஜா ஷைலு
மண்ணிலே
மண்ணிலே வந்து
உடையுது வானம்
மழையிலே
கரையுதே ரெண்டு
மனங்களின் தூரம்
பூ சிதறிடும்
மேகம் பொன் வானவில்
வரைகிறதோ ஏழ்
நிறங்களினால் நமக்கொரு
மாலை செய்கிறதோ
வான் தாரகை
எல்லாம் நீர் பூக்களின்
தோரணமோ வான்
தேவதைகள் ஆசிகள்
கூறும் அச்சதையோ
இத்தனை
மழையிலும் இந்த
நாணம் கரையவில்லை
கன்னி நான்
நனையலாம் கற்பு
நனைவதில்லை
அடி மனிதனை
விடவும் மழை துளி
உயர்ந்தது இது வரை
புரியவில்லை
ஐ லவ் யூ
ஷைலஜா ஷைலஜா
ஓ ஷைலு ஷைலு
ஐ லவ் யூ ஷைலஜா
ஷைலஜா ஷைலு
நான் காதலை
சொல்ல என் வாய்
மொழி துணை இல்லையே
தன் வார்த்தைகளால் மழை
துளி என் மனம் சொல்லியதே
முன் கோபுர
அழகை உன் தாவணி
மூடியதே உன் ரகசியத்தை
மழை துளி அம்பலம்
ஆக்கியதே
மழை விழும்
பொழுதெல்லாம்
என்னை வந்து சேர்வாயா
காதலை
சேர்ப்பதே மழையின்
வேலையா
அட மலர்களில்
மழை விழும் வேர்களில்
வெயில் விழும் அதிசயம்
அறிவாயா
ஐ லவ் யூ
ஷைலஜா ஷைலஜா
ஓ ஷைலு ஷைலு
ஐ லவ் யூ ஷைலஜா
ஷைலஜா ஷைலு
மண்ணிலே
மண்ணிலே வந்து
உடையுது வானம்
மழையிலே
கரையுதே ரெண்டு
மனங்களின் தூரம்
காதில் கேட்கும்
இடி ஓசை காதல்
நெஞ்சின் பரிபாஷை
மழையை
போலே உறவாட
மனதில் என்ன பேராசை
நீரில் எழுதும்
காதல் அழியும் மழை
நீரே எழுதிடும் காதல்
அழியாதே
ஐ லவ் யூ
ஷைலஜா ஷைலஜா
ஓ ஷைலு ஷைலு
ஐ லவ் யூ ஷைலஜா
ஷைலஜா ஷைலு
