Manushanai Manushan Saapiduraandaa |
---|
பாலும் தேனும் பெருகி ஓடுது
பரந்த சீமையிலே
நாம பொறந்த சீமையிலே
பாடு படுறவன் வயிறு காயிது
பாதி நாளையிலே வருஷத்தில்
பாதி நாளையிலே
ஹேய் மனுசன மனுஷன்
சாப்பிடுறான்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ
நம்ம கவலை
ஹ ஹ கிக் கிக் கிக் ஹகேய்
மானம் பொழியுது பூமி விளையுது
தம்பி பயலே
நாம வாடி வதங்கி வளப்படுத்துறோம்
வயலே
மானம் பொழியுது பூமி விளையுது
தம்பி பயலே
நாம வாடி வதங்கி வளப்படுத்துறோம்
வயலே
ஆனா தானிய மெல்லாம்
வலுத்தவருடைய கையிலே
தானிய மெல்லாம்
வலுத்தவருடைய கையிலே
இது தகாதுன்னு எடுத்து சொல்லியும்
புரியலே அதாலே
மனுசன மனுஷன்
சாப்பிடுறான்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ
நம்ம கவலை
ஹேய்ஹஹஹாகிக் கிக்
என்னடா நெளிஞ்சிக்கிட்டு போற
நேராப் போடா பப் பப் டேய்
தரைய பார்த்து நிக்குது
நல்ல கதிரு
தன் குறைய மறந்து மேலே பார்க்குது
பதரு
தரைய பார்த்து நிக்குது
நல்ல கதிரு
தன் குறைய மறந்து மேலே பார்க்குது
பதரு
அது போல் அறிவு உள்ளது
அடங்கி கிடக்குது வீட்டிலே
அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே
எதுக்கும் ஆகாத சிலது
ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே அதாலே
மனுசன மனுஷன்
சாப்பிடுறான்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ
நம்ம கவலை
ஹஹாய் ஹா கிக் கிக் தா
ஆணவத்துக்கு அடி பணியாதே
தம்பி பயலே
எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே
தம்பி பயலே
ஆணவத்துக்கு அடி பணியாதே
தம்பி பயலே
எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே
தம்பி பயலே
பூனையைப் புலியாய் எண்ணி விடாதே
தம்பி பயலே
பூனையைப் புலியாய் எண்ணி விடாதே
தம்பி பயலே
உண்மை புரிஞ்சிக்காமலே நடுங்காதேடா
தம்பி பயலே டேய்
மனுசன மனுஷன் சாப்பிடுறான்டா
தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ
நம்ம கவலை
மனுசன மனுஷன் சாப்பிடுறான்டா
தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ
நம்ம கவலை
ஆஆஅஆஅஆஅஆஅஆஅஆஅஆஅ