Marainthirunthu Parkum |
---|
{ மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன } (2)
ஸ்வாமி
{ அழகர் மலை
அழகா இந்த சிலை
அழகா என்று மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன } (2)
நவரசமும்
முகத்தில் நவரசமும்
{ மலர்ந்திருக்கும்
முகத்தில் நவரசமும்
செக்க சிவந்திருக்கும்
இதழில் கனி ரசமும் } (2)
கண்டு
மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன
{ எங்கிருந்தாலும்
உன்னை நான் அறிவேன்
உன்னை என்னையல்லால்
வேறு யார் அறிவார் } (2)
{ பாவையின்
பதம் காண நாணமா } (2)
{ உந்தன் பாட்டுக்கு நான்
ஆட வேண்டாமா } (2)
மாலவா
வேலவா மாயவா
ஷண்முகா
மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன
{ நாதத்திலே
தலைவன் குழல் கேட்டேன்
அந்த நாணத்திலே என்னை
நான் மறந்தேன் } (2)
மோகத்திலே
என்னை மூழ்க வைத்து } (2)
{ ஒரு ஓரத்திலே நின்று
கள்வனை போல் } (2)
மாலவா
வேலவா மாயவா
ஷண்முகா
மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன
மானாட
மலராட மதி ஆட
நதி ஆட மங்கை
இவள் நடனமாட
வானாட
மண்ணாட கொடி
ஆட இடை ஆட
வஞ்சி இவள்
கைகள் ஆட
சுவையோடு
நானாட என்னை நாடி
இதுவேளை இரவினில்
துணையாக ஓடி வருவாய்
தூயனே மாலவா
மாயனே வேலவா என்னை
ஆளும் ஷண்முகா வா
மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன
அழகர் மலை
அழகா இந்த சிலை
அழகா என்று மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன