Marangal Tharum Malargal |
---|
மரங்கள் தரும் மலர்கள்
அதன் நிறங்கள் அதை அறியோம்
மலைகள் கடல் அலைகள்
எந்த நிறங்கள் அதை அறியோம்
பனியும் அதன் குளிரும்
உடல் உணர்வில் நாம் அறிவோம்
ஊற்றும் மழை நீரும்
தரும் காற்றும் நாம் அறிவோம்
முகத்தின் விழி இரண்டும் இன்றி
அகத்தின் விழி கொண்டோம்
முதல்வன் தந்த உலகை
இங்கு அதனால் என்றும் காண்போம்
மரங்கள் தரும் மலர்கள்
அதன் நிறங்கள் அதை அறியோம்
அல்லா சிவன் ஏசு
என பலவாகிடும் இறைவன்
அல்லா சிவன் ஏசு
என பலவாகிடும் இறைவன்
ஒன்றும் சிலவென்றும்
பல என்றும் நமக்கில்லை
ஒன்றும் சிலவென்றும்
பல என்றும் நமக்கில்லை
அருளாய் உண்மைப் பொருளாய்
நிற்கும் இறைவன் அடி போற்றி
உருவே இன்றி அருவாய்
நித்த ஒருவன் அடி போற்றி
முதலும் ஒரு முடிவும் அற்ற
தலைவன் அடி போற்றி
கருணை நல்ல இரக்கம் கொண்ட
கடவுள் அடி போற்றி