Margazhiyil Kothippu |
---|
பாடலாசிரியர் : வாலி
மார்கழியில் கொதிப்பு சித்திரையில் குளிர்ச்சி என்ன இந்த தவிப்பு என்ன இந்த தவிப்பு மார்கழியில் கொதிப்பு சித்திரையில் குளிர்ச்சி என்ன இந்த தவிப்பு என்ன இந்த தவிப்பு
காதல் உண்டான மயக்கம் கைகள் கொண்டாடும் நெருக்கம் காலம் இவ்வாறு இருக்கும்
காதல் உண்டான மயக்கம் கைகள் கொண்டாடும் நெருக்கம் காலம் இவ்வாறு இருக்கும்
மார்கழியில் கொதிப்பு சித்திரையில் குளிர்ச்சி என்ன இந்த தவிப்பு என்ன இந்த தவிப்பு
பூங்குழலில் தொடங்கி பாதம் வரை அளக்க நீ கிடந்து தவிக்க நாணம் எனை தடுக்க பூங்குழலில் தொடங்கி பாதம் வரை அளக்க நீ கிடந்து தவிக்க நாணம் எனை தடுக்க
ஆன மட்டும் நினைத்தேன் ஆசைகளை அடக்க ஆன மட்டும் நினைத்தேன் ஆசைகளை அடக்க மார்க்கம் இல்லை எனக்கு மன்மதனை விரட்ட
மேனி செவ்வாழை குருத்து மெல்ல நோகாமல் எடுத்து மாலை ராஜாங்கம் நடத்து
மார்கழியில் கொதிப்பு சித்திரையில் குளிர்ச்சி என்ன இந்த தவிப்பு என்ன இந்த தவிப்பு
நாலு வகை குணத்தில் நாணம் ஒரு நடிப்பு நாலு வகை குணத்தில் நாணம் ஒரு நடிப்பு
நாயகனின் அணைப்பில் நாடகங்கள் எதற்கு நாயகனின் அணைப்பில் நாடகங்கள் எதற்கு
ஏழு ஸ்வரம் விளங்க நாதஸ்வரம் முழங்க ஏழு ஸ்வரம் விளங்க நாதஸ்வரம் முழங்க
மாலை இடும் தினத்தில் மங்கை உந்தன் வசத்தில்
கொஞ்சம் தொட்டாலும் நடுக்கம் எட்ட நின்றாலும் வருத்தம் என்ன அம்மாடி தயக்கம்
மார்கழியில் கொதிப்பு சித்திரையில் குளிர்ச்சி என்ன இந்த தவிப்பு என்ன இந்த தவிப்பு
காதல் உண்டான மயக்கம் கைகள் கொண்டாடும் நெருக்கம் காலம் இவ்வாறு இருக்கும்