Marghazhi Poove

Marghazhi Poove Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ஏ ஆர் ரகுமான்

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்

மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
ஆஆஅஆஅஆஆஆஆஆஆ
ஆஆஆஅ ஆஆஆஅஆஆஆஅ

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்

வாழ்க்கையின் ஒரு பாதி
நான் என்று வசிப்பேன்
வாழ்க்கையின் மறு பாதி
நான் என்று ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே
நான் என்றும் மிதப்பேன்

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்

வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந் தேன் தந்து விடும் செம் பூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்

காவேரி மணலில் நடந்ததுமில்லை
கடற்கரை அலையில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை


சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் ஆணாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம்
நான் காணவில்லை

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்

பெண் மற்றும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை

பெண் மற்றும்
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்

ஆஆஆஆஆஆஅஆஅ
ஆஆஆஅஆஆஆஆஆஆ
ஆஆஆஅஆஆஆஆஆஆ
நா ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஅ

வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந் தேன் தந்து விடும் செம் பூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்